வெண்மழைச் சாரலில் ஒதுங்கும் சிறு குருவிப்போல உன் மனக்குமரல்களில் முடங்கிடாதே பெண்ணே!!! கணவன் கட்டளையிட்டான் என்றால் கட்டிய கயிறாய் பரிசாக்கு- அவனுக்கு... மருங்காதே மனதளவில்... புதுமைப் படைத்திட பூவுக்கும் போர்க்களம் வேண்டுமடி நான் கண்ட புதுமைப்பெண்ணே!. சிந்திய வேர்வை சிறிதுசிறிதாக சேர்த்துவை அதுவே- ஆபத்தையழிக்கும் ஆயுதமடி நான் கண்ட புதுமைப்பெண்ணே!. அடுப்படியில் அடங்கிடாமல் அனைவரையும் அடக்கிடு, அன்பிற்கு அடங்காதவனை அறிவாளால் அடக்கிடு என்னருமை புதுமைப்பெண்ணே!. தேக்கரண்டி புடிக்கும் கையில் AK47 எதற்க்கேங்கிறாயா உன் வாழ்வை சீராக்க இது சிறந்த வழியடி புதுமைப் பெண்ணே!!!
தமிழ்பிரளயம்-Tamil Pralayam