கோபத்தின் வீழ்வுதனில் நானிருந்தேன் தடுத்தான் நண்பன் தவிர்த்தேன் -அவனை, யோசித்து பார்த்தேன் கோபம் குறைந்தது - அவளென்ற சூழ்நிலை மாறியபோது... அமைதி தேடி ஆலயம் சென்றேன் கடவுள்தான் அமைதி, அமைதிதான் கடவுள்... அவளென்ற எண்ணம் தோன்றிய பின் கடவுள் மறைந்ததேன்... கொட்டும் மழையில் கொதித்து போனேன் தென்றல் காற்றில் விலகி நடந்தேன் எண்ணம் இருந்தும் எரியா தீபம் போல தனித்திருந்தேன் அவள் நினைவால்!... புத்தகம் தொட்டால் படிப்பில் கவனம் -அன்று! புத்தகம் தொட்டால் அவள் நினைவோ- இன்று! கோபம் குறைந்து,அமைதி பெற்றேன், மழையில் நனைந்து தென்றலில் ஆடி தீபம் போலிருந்தேன் படிப்பில் ஆம்ம்!!!... அவளென்ற சூழ்நிலை மாறியபோது... .
தமிழ்பிரளயம்-Tamil Pralayam