விரல் பிடித்து கைக்கோர்த்து
கைவீசி " கை வீசம்மா கை வீசு"
என்றெல்லாம் பாடிய நியாபகம்...
புழுதியா சடுதியா நினைக்கவில்லை
உருண்டுதான் பிரண்டோமே!
உடைகிழிந்திருந்தும் சிரித்தோமே!
என்ன ஒரு நட்பு!!! நினைத்தாலே பரவசமாய்....கால்கடுக்க நீ மிதிக்க,
முன்னமர்ந்து பெண்பார்த்த
நினைவெல்லாம் நிழலாய் நம் நெஞ்சில்...
கோடையில் (வா)ஆடிய கோலியும்,
கிரிகெட்டும்- கண்விழித்து
கதை பேசி நகைத்து
நாட்கள் நகர்த்திய- நட்பே நலமா?
விடைபெற்றோம் நாம்
விடைத்தெரியாமல்- கல்லூரிக்கு...
நான் கண்ட முதல் பிரிவும்
முறியா உறவும் நீ....
உணர்ந்தறியா உலகைவிட்டு,
நான் உணர்ந்த முதலெழுத்து நீ!!
நாம் பயின்ற முதல்
வார்த்தை " மச்சி சௌக்கியமா"...
ஏன், எதற்கு-வினாயில்லை?
கூப்பிட்டோம், வந்தோம்,
சிரித்தோம், வாழ்ந்தோம்- வானம்பாடியாய்...!
தவறியதில்லை!
படத்தை பாடத்தையில்லை ....
கூச்சல்,விசில், ஆட்டம் பாட்டமுமாய்
ஓர் சிலிர்ப்பு!- பண்டிகையோ?
ஆம்ம்....
ஆண்டுவிழா நாம் கல்லூரியை ஆண்டவிழா...
தோழமையா, காதலா
வெற்றியா, தோற்றோமா?
தெரியாமல், புரியாமல்
நான் தொலைத்த முதல் பொக்கிஷமும்
முடியாத முதல் பயணமும் நீதான்!!!....
பிரிவு வலியது ஆனால்
அறுதியானது!
பிரிந்தும், வளர்ந்தும்
சிலநேரம் உலர்ந்தும்
உறுதியானது நட்பு!!!...
வள்ளுவன் என்றும் பொய்த்ததில்லை
ஆம்ம்...." அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்"
உணர்ந்தோம், உணர்ந்ததினால்
உணர்த்துவோம் உலகுக்கு
நம் நடப்பால்!!!...
.
உணர்வுகளின் கலவை.
ReplyDelete