Skip to main content

நட்பு!!!

விரல் பிடித்து கைக்கோர்த்து
   கைவீசி " கை வீசம்மா கை வீசு"
என்றெல்லாம் பாடிய நியாபகம்...

புழுதியா சடுதியா நினைக்கவில்லை
   உருண்டுதான் பிரண்டோமே!
உடைகிழிந்திருந்தும் சிரித்தோமே!
   என்ன ஒரு நட்பு!!! நினைத்தாலே பரவசமாய்....

கால்கடுக்க நீ மிதிக்க,
    முன்னமர்ந்து பெண்பார்த்த
நினைவெல்லாம் நிழலாய் நம் நெஞ்சில்...
   கோடையில் (வா)ஆடிய கோலியும்,
கிரிகெட்டும்- கண்விழித்து
   கதை பேசி நகைத்து
நாட்கள் நகர்த்திய- நட்பே நலமா?

விடைபெற்றோம் நாம்
   விடைத்தெரியாமல்- கல்லூரிக்கு...
நான் கண்ட முதல் பிரிவும்
   முறியா உறவும் நீ....

உணர்ந்தறியா உலகைவிட்டு,
    நான் உணர்ந்த முதலெழுத்து நீ!!
நாம் பயின்ற முதல்
   வார்த்தை " மச்சி சௌக்கியமா"...
ஏன், எதற்கு-வினாயில்லை?
   கூப்பிட்டோம், வந்தோம்,
சிரித்தோம், வாழ்ந்தோம்- வானம்பாடியாய்...!

தவறியதில்லை!
படத்தை பாடத்தையில்லை ....
கூச்சல்,விசில், ஆட்டம் பாட்டமுமாய்
ஓர் சிலிர்ப்பு!- பண்டிகையோ?
ஆம்ம்....
ஆண்டுவிழா நாம் கல்லூரியை ஆண்டவிழா...

தோழமையா, காதலா
வெற்றியா, தோற்றோமா?
தெரியாமல், புரியாமல்
நான் தொலைத்த முதல் பொக்கிஷமும்
முடியாத முதல் பயணமும் நீதான்!!!....

பிரிவு வலியது ஆனால்
    அறுதியானது!
பிரிந்தும், வளர்ந்தும்
   சிலநேரம் உலர்ந்தும்
உறுதியானது நட்பு!!!...
வள்ளுவன் என்றும் பொய்த்ததில்லை
                   ஆம்ம்....
" அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்"
     உணர்ந்தோம், உணர்ந்ததினால்
உணர்த்துவோம் உலகுக்கு
     நம் நடப்பால்!!!...

.

Comments

Post a Comment

Popular posts from this blog

பெண் என்பவள்!!!

வெட்கி குனிதல் நாணம்! ஈர்பல் நகைத்தல் வெட்கம்! விசும்பிய குரலும், சுருங்கிய விழியும் நேசம்! கோதிய விரலும் கோதுதல் பதமும் பாசம்! மக்கட்- அதட்டிய பின்பு, தானே அழுதிடும் கண்கள் சோகம்! பஞ்சனை மஞ்சத்தில் மேனி பசுந்தீ பரவலாய் மோகம்! தன்னுயிர் நீந்தீனும் மக்கட், பதி நினை மறவா- ஒரு தீரா தாபம்! தன் உடல் எரித்தும் ஒளி கொடுக்கும்- அவள் என்றும் அணையா உயிர் தீபம்!...

நீயா சொல்லும் வரை...

நினைக்கும் போது கூட     கண்ணில் நீர் வந்தது நீ என்னை கேட்க்கும் வரை,     கேட்ட கணத்தில் நின்றோதொரு நொடி     என் இயக்கமெல்லாம்.. கண்ணே என்றா     நன் அழைப்பேன், இல்லை, இல்லை     கன்னி எனை வென்ற கள்ளியா நீ     இல்லை, இல்லை துன்பங்கள் குறைத்தாய்    இன்பத்தில் இருக்கும்போது ஆம்! நீ என்னின் நிகழ்காலம்!...     சுற்றி வர நினைத்தேன் சுழற் காற்றாய்,     தடைபோட நினைத்தேன் அணைக்கட்டாய்,     சுழன்று கொண்டு அணைப்போட்டாய்     உன் நெஞ்சில்- எனக்கு... நீயா வந்து சொல்லும் வரை    நானா உரைப்பேன் உனைப்பற்றி என்    நெஞ்சில் உள்ளதை... .

மெகா கவியே!!!..

பெண்ணை இழித்தோரை    இடித்துவிட்டாய் உந்தன் இன்னிசை பாக்களால்,    நம்மை எதிர்த்தோரை துரத்திவிட்டாய்    உந்தன் வேட்க்கையால்... காக்கை, குருவி    எங்கள் ஜாதி என்றாய் உயிர் வாழும் ஒற்றுமையினாலா?    ஓடியாடும் பாப்பாக்கும், பாடி பறக்கும் குயிலுக்கும்    ஒரு பாட்டு பாடிச்சென்றாய் இந்த உலகில்... வெண்தலை முண்டாசும்,    கருநிற உடற்கோப்பும், கால்களிலே கட்டை செருப்பும்,    மார்தனிலே வீரமுழக்கமும், சிந்தையிலே விடுதலை வேட்கையுடன்,    வந்தாய் நீ... வீன்நேரம் வீட்டில்    கூட கழிக்காமல் விடுதலை வித்துக்கள்    விதைத்தாய் இவ்வுலகில்... வீறுகொண்டேழுந்தாய் விடுதலைக்காக    சீர் செய்திருந்தாய் உந்தன் சிந்தையை பேர் கொண்டாய் " மகா கவி சுப்ரமணிய பாரதி" என்றா இல்லை, இல்லை "மெகா கவி சூப்பர் மனிதன் பாரதி" என்று... நீ பிறந்ததும் விடுதலை    வேட்க்கை வந்ததா- இல்லை விடுதலை வேட்க்கைக்காக    நீ பிறந்து வந்...