Skip to main content

நட்பு!!!

விரல் பிடித்து கைக்கோர்த்து
   கைவீசி " கை வீசம்மா கை வீசு"
என்றெல்லாம் பாடிய நியாபகம்...

புழுதியா சடுதியா நினைக்கவில்லை
   உருண்டுதான் பிரண்டோமே!
உடைகிழிந்திருந்தும் சிரித்தோமே!
   என்ன ஒரு நட்பு!!! நினைத்தாலே பரவசமாய்....

கால்கடுக்க நீ மிதிக்க,
    முன்னமர்ந்து பெண்பார்த்த
நினைவெல்லாம் நிழலாய் நம் நெஞ்சில்...
   கோடையில் (வா)ஆடிய கோலியும்,
கிரிகெட்டும்- கண்விழித்து
   கதை பேசி நகைத்து
நாட்கள் நகர்த்திய- நட்பே நலமா?

விடைபெற்றோம் நாம்
   விடைத்தெரியாமல்- கல்லூரிக்கு...
நான் கண்ட முதல் பிரிவும்
   முறியா உறவும் நீ....

உணர்ந்தறியா உலகைவிட்டு,
    நான் உணர்ந்த முதலெழுத்து நீ!!
நாம் பயின்ற முதல்
   வார்த்தை " மச்சி சௌக்கியமா"...
ஏன், எதற்கு-வினாயில்லை?
   கூப்பிட்டோம், வந்தோம்,
சிரித்தோம், வாழ்ந்தோம்- வானம்பாடியாய்...!

தவறியதில்லை!
படத்தை பாடத்தையில்லை ....
கூச்சல்,விசில், ஆட்டம் பாட்டமுமாய்
ஓர் சிலிர்ப்பு!- பண்டிகையோ?
ஆம்ம்....
ஆண்டுவிழா நாம் கல்லூரியை ஆண்டவிழா...

தோழமையா, காதலா
வெற்றியா, தோற்றோமா?
தெரியாமல், புரியாமல்
நான் தொலைத்த முதல் பொக்கிஷமும்
முடியாத முதல் பயணமும் நீதான்!!!....

பிரிவு வலியது ஆனால்
    அறுதியானது!
பிரிந்தும், வளர்ந்தும்
   சிலநேரம் உலர்ந்தும்
உறுதியானது நட்பு!!!...
வள்ளுவன் என்றும் பொய்த்ததில்லை
                   ஆம்ம்....
" அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்"
     உணர்ந்தோம், உணர்ந்ததினால்
உணர்த்துவோம் உலகுக்கு
     நம் நடப்பால்!!!...

.

Comments

Post a Comment

Popular posts from this blog

பெண் என்பவள்!!!

வெட்கி குனிதல் நாணம்! ஈர்பல் நகைத்தல் வெட்கம்! விசும்பிய குரலும், சுருங்கிய விழியும் நேசம்! கோதிய விரலும் கோதுதல் பதமும் பாசம்! மக்கட்- அதட்டிய பின்பு, தானே அழுதிடும் கண்கள் சோகம்! பஞ்சனை மஞ்சத்தில் மேனி பசுந்தீ பரவலாய் மோகம்! தன்னுயிர் நீந்தீனும் மக்கட், பதி நினை மறவா- ஒரு தீரா தாபம்! தன் உடல் எரித்தும் ஒளி கொடுக்கும்- அவள் என்றும் அணையா உயிர் தீபம்!...

பெற்றோர்!!!!???

அணு அணுவாய் சேர்த்து துளி துளியாய் கோர்த்து ஓர் உருவாய், அவள் கருவாய் வளர்த்து - வலியின்றி எனை வலியோடு பிறப்பித்த அன்னையே உன் பாதம் தொட்ட ஓர் துளி நீரும் அமிர்தமே.....!!! பிடிப்பின்றி பிறந்த எனை படிபின்றி ஆக்காமல் குருதியை குழைத்து உணவாய் ஊட்டி - உடல் இளைத்தும், களைத்தும் மீண்டும் எனக்காய் பிறக்கும் தந்தையே தவமாய்! தவத்தின் வரனாய் பெற்றேன் உன்னை.....!!! வாழ்வேன் நான் வளமாய் உன் விழி சிரிக்க- அன்னை மடி குளிர.. வளர்வேன் இமயமாய் வானளவு வாழ்கையை எதிர்த்து! வீழ்ந்தாலும் உம் காலில் மட்டும்! நலமாய் வாழ, வளமாய் வாழ உங்கள் ஆசியுடன் துவங்குகிறேன் வாழ்கையை....!!!!!
சுதந்திரம்!!! நித்தம் நித்தம் குறை கூறி தற்பெருமை தலைக்கேறி தவிக்கும் கும்பலில் - நானும் ஒருவனாய்.... அரிசி முதல் ஆட்சி வரை கால் வலி முதல் கால்வாய் வரை சுற்றமே குற்றம் என... காந்தியா, நேதாஜியா? யார் சரி, யார் வலியவர் , பெரியவர்.. பட்டிமன்றங்களில் பட்டையை கிளப்பும் -நாங்கள் பீர் ஊற்றி சட்டை கழற்றி சுதந்திரமாய் கூச்சலிடும் காக்காய்கள் - இறுமாப்பு! " சுதந்திரம் பெற்றுவிட்டோமம்"... தாய் மடி(விலை நிலம்) விற்று தண்ணீருக்கும், தாணியத்துக்கும் தலை விரித்து, தாடி வளர்க்கும் தரம் உயர்ந்த முதலைகள் - நாங்கள் ஆம்!!! " சுதந்திரம் பெற்று விட்டோமாம்"... "தனி மனிதனுக்கு உணவில்லை என்றாள் ஜகத்தினை ஆழிப்போம்!!!" என்றான் பாரதி - என்னே ஒரு இறுமாப்பு!... நம் சமூகமே சாக்கடையாய், உணவின்றி அலையும் தருணம் சில பல ஆண்டுகளில் இருந்தும், சிரிப்போம் மரம் விற்று, பணம் வளர்ப்போம் நிலம் விற்று...ஏனென்றால் " நாம் சுதந்திரம் அடைந்துவிட்டோம்" இவை யாவும் தெரிந்தும், சகதியிலும், புழுதியிலும் நெளியும் சாக்கடை புழுவாய் தானிருந்தேன்.. சேற்றில் முளைத்த சில தாமர