Skip to main content

யார் இவள்!...


பார்த்தவுடன் பதிந்தது இரண்டு.!
  உதடு குவித்து பேசிய அழகும்,
உருட்டி மிரட்டிய விழியும்....
  இதிலோர் அதிசியமா! இல்லையே...
அழகோ? அறிவோ? 
நகைத்தபடி, முடி கோதி சிந்தித்தால்
புரியாத புன்முறுவலில் கிடைத்தது...ஆம்
கேட்டவுடன் புரியாத அவள் பெயர்... 

உலகுக்கு உண்மை உரைத்தவனின்
உயிரானவளின் செல்ல பெயராம்!!!
சிகப்பு வர்ணத்தை நாமத்தில்
கொண்ட வெள்ளை மனதுக்காரி...

பிரித்தால் பொருளில்லை இரட்டைகிளவியில்,
இரண்டாய் பகுத்தால் ஓற்பொருள் அடுக்குத்தொடரில்...
ஆனால்!!!
எலுத்துக்கோர் பொருளும் 
பொருள் போல் இவள் வாழ்வும்!!!

மைராவின் கசப்பும், ஹுமாவின் கற்பனா
பறவையின் மனதும்...தான்
உணர்ந்த இராவின் தனித்த
கனத்த இதயமும்...குழப்பம் தானே??
வாழ்வே குழப்பம் தான்...தொடரும் 
நிழலாய் இவள் உறவு....
 

உணர்ந்ததில் உண்மையில் - இவள்!!
எத்தனை ஓட்டம் மனதிலும், கால்களிலும்
விழிப்பற்றிய இதழ் சிரிப்பும்
இதழ் குவிந்து விழிசுருங்கிய கோபமும்
பதைப்பின்றிய பதட்டமும்....
விண் கிழித்தது பறக்க
துடிக்கும் உத்வேகமும்
வாணோங்கி வாழதுடிக்கும் வலிமையும்...
ஓர் சேர ஓர் வரியாய் இவள்....
உறவின் மடியில் உணர்வின் பிடியில்
உறவாடி விளையாடும் ஓர் நல் தோழி....

நானுணர்ந்த, உரைத்த நீ - கொஞ்சமே!!!

விரல் பிடித்த்து விளையாடும்
மழலை போல் என்றும்
இன்பமுடன் - உடன் வரும்
நட்ப்பாய்...இது போல்....

தோஸ்தி க்கீ தாடப் கோ திஹ்யா நஹி ஜாத்தா,
தில் மே லகி ஆஹ் கோ பூஜாயா நஹி ஜாத்தா,
கித்நி பீ த்தூரி ஹோ தோஸ்தி மே,
ஆப் ஜைசே தோஸ்த் கோ ப்ஹுலாயா நஹி ஜாத்தா..!!!

Comments

Popular posts from this blog

பெண் என்பவள்!!!

வெட்கி குனிதல் நாணம்! ஈர்பல் நகைத்தல் வெட்கம்! விசும்பிய குரலும், சுருங்கிய விழியும் நேசம்! கோதிய விரலும் கோதுதல் பதமும் பாசம்! மக்கட்- அதட்டிய பின்பு, தானே அழுதிடும் கண்கள் சோகம்! பஞ்சனை மஞ்சத்தில் மேனி பசுந்தீ பரவலாய் மோகம்! தன்னுயிர் நீந்தீனும் மக்கட், பதி நினை மறவா- ஒரு தீரா தாபம்! தன் உடல் எரித்தும் ஒளி கொடுக்கும்- அவள் என்றும் அணையா உயிர் தீபம்!...

நீயா சொல்லும் வரை...

நினைக்கும் போது கூட     கண்ணில் நீர் வந்தது நீ என்னை கேட்க்கும் வரை,     கேட்ட கணத்தில் நின்றோதொரு நொடி     என் இயக்கமெல்லாம்.. கண்ணே என்றா     நன் அழைப்பேன், இல்லை, இல்லை     கன்னி எனை வென்ற கள்ளியா நீ     இல்லை, இல்லை துன்பங்கள் குறைத்தாய்    இன்பத்தில் இருக்கும்போது ஆம்! நீ என்னின் நிகழ்காலம்!...     சுற்றி வர நினைத்தேன் சுழற் காற்றாய்,     தடைபோட நினைத்தேன் அணைக்கட்டாய்,     சுழன்று கொண்டு அணைப்போட்டாய்     உன் நெஞ்சில்- எனக்கு... நீயா வந்து சொல்லும் வரை    நானா உரைப்பேன் உனைப்பற்றி என்    நெஞ்சில் உள்ளதை... .

நிராகரிப்பு!!!!

அவனும் வேண்டாம் அவனென்றால் எதுவும் வேண்டாமாம்! தன்னிலை தாழாமலும் பெண்ணிலை குறையாமலும் கூறினாள்... என்ன உக்கிரம்!!!... வழிபார்த்து விழியாக வாசல் வந்தேன்- கூறிய செவிரெண்டும் விழுங்கியவை யாவும் தாக்கின மின்னலாய், வழியுமுன் உள்ளடக்கிய விழியாய், விழி நிமிர்த்தி நான் கண்டேன் என்னவள்- சென்னிலவாய் கோபத்தில்...! நகைத்த இதழும் கனத்த இதயமுமாய் கண் நீர் சிரிக்க விடைப்பெற்றாள் விரைவாக.. தடுமாறிய இதயமும் தடம்மாறிடா உறவுமாய் நிமிர்ந்த சிரமும் தாழ்ந்த விழியுமாய் நான்... குறிப்பறிந்து குறைகூறா மனதுடன், என் வலியை வழியனுப்பி, என்னவள் வலி உணர்துனர்ந்தேன்... கட்டுபாடற்ற கலங்கிய விழி அணையுடைத்து- அரங்கேற்றியது கண்ணீர் மழையை என்னவளுக்காய்... வெட்க்குகிறேன் நான், நடந்து முடியா வார்த்தைகளுக்கும் அரங்கேறிய நாடகத்துக்கும்... நிச்சயமாய்!!! அவள்- என்னவள்தான் என் நெஞ்சின் அறையில் நான்! - அவளுக்கில்லை ஆம்ம்...! அவளுக்கானவன் நானில்லை- இருந்தும் அவளை நிராகரிக்க முடியவில்லை, அவள்!- என்னின் அலைகழிக்க முடியா " இதய துடிப்பு " .... .