Skip to main content

யார் இவள்!...


பார்த்தவுடன் பதிந்தது இரண்டு.!
  உதடு குவித்து பேசிய அழகும்,
உருட்டி மிரட்டிய விழியும்....
  இதிலோர் அதிசியமா! இல்லையே...
அழகோ? அறிவோ? 
நகைத்தபடி, முடி கோதி சிந்தித்தால்
புரியாத புன்முறுவலில் கிடைத்தது...ஆம்
கேட்டவுடன் புரியாத அவள் பெயர்... 

உலகுக்கு உண்மை உரைத்தவனின்
உயிரானவளின் செல்ல பெயராம்!!!
சிகப்பு வர்ணத்தை நாமத்தில்
கொண்ட வெள்ளை மனதுக்காரி...

பிரித்தால் பொருளில்லை இரட்டைகிளவியில்,
இரண்டாய் பகுத்தால் ஓற்பொருள் அடுக்குத்தொடரில்...
ஆனால்!!!
எலுத்துக்கோர் பொருளும் 
பொருள் போல் இவள் வாழ்வும்!!!

மைராவின் கசப்பும், ஹுமாவின் கற்பனா
பறவையின் மனதும்...தான்
உணர்ந்த இராவின் தனித்த
கனத்த இதயமும்...குழப்பம் தானே??
வாழ்வே குழப்பம் தான்...தொடரும் 
நிழலாய் இவள் உறவு....
 

உணர்ந்ததில் உண்மையில் - இவள்!!
எத்தனை ஓட்டம் மனதிலும், கால்களிலும்
விழிப்பற்றிய இதழ் சிரிப்பும்
இதழ் குவிந்து விழிசுருங்கிய கோபமும்
பதைப்பின்றிய பதட்டமும்....
விண் கிழித்தது பறக்க
துடிக்கும் உத்வேகமும்
வாணோங்கி வாழதுடிக்கும் வலிமையும்...
ஓர் சேர ஓர் வரியாய் இவள்....
உறவின் மடியில் உணர்வின் பிடியில்
உறவாடி விளையாடும் ஓர் நல் தோழி....

நானுணர்ந்த, உரைத்த நீ - கொஞ்சமே!!!

விரல் பிடித்த்து விளையாடும்
மழலை போல் என்றும்
இன்பமுடன் - உடன் வரும்
நட்ப்பாய்...இது போல்....

தோஸ்தி க்கீ தாடப் கோ திஹ்யா நஹி ஜாத்தா,
தில் மே லகி ஆஹ் கோ பூஜாயா நஹி ஜாத்தா,
கித்நி பீ த்தூரி ஹோ தோஸ்தி மே,
ஆப் ஜைசே தோஸ்த் கோ ப்ஹுலாயா நஹி ஜாத்தா..!!!

Comments

Popular posts from this blog

பெண் என்பவள்!!!

வெட்கி குனிதல் நாணம்! ஈர்பல் நகைத்தல் வெட்கம்! விசும்பிய குரலும், சுருங்கிய விழியும் நேசம்! கோதிய விரலும் கோதுதல் பதமும் பாசம்! மக்கட்- அதட்டிய பின்பு, தானே அழுதிடும் கண்கள் சோகம்! பஞ்சனை மஞ்சத்தில் மேனி பசுந்தீ பரவலாய் மோகம்! தன்னுயிர் நீந்தீனும் மக்கட், பதி நினை மறவா- ஒரு தீரா தாபம்! தன் உடல் எரித்தும் ஒளி கொடுக்கும்- அவள் என்றும் அணையா உயிர் தீபம்!...

பெற்றோர்!!!!???

அணு அணுவாய் சேர்த்து துளி துளியாய் கோர்த்து ஓர் உருவாய், அவள் கருவாய் வளர்த்து - வலியின்றி எனை வலியோடு பிறப்பித்த அன்னையே உன் பாதம் தொட்ட ஓர் துளி நீரும் அமிர்தமே.....!!! பிடிப்பின்றி பிறந்த எனை படிபின்றி ஆக்காமல் குருதியை குழைத்து உணவாய் ஊட்டி - உடல் இளைத்தும், களைத்தும் மீண்டும் எனக்காய் பிறக்கும் தந்தையே தவமாய்! தவத்தின் வரனாய் பெற்றேன் உன்னை.....!!! வாழ்வேன் நான் வளமாய் உன் விழி சிரிக்க- அன்னை மடி குளிர.. வளர்வேன் இமயமாய் வானளவு வாழ்கையை எதிர்த்து! வீழ்ந்தாலும் உம் காலில் மட்டும்! நலமாய் வாழ, வளமாய் வாழ உங்கள் ஆசியுடன் துவங்குகிறேன் வாழ்கையை....!!!!!
சுதந்திரம்!!! நித்தம் நித்தம் குறை கூறி தற்பெருமை தலைக்கேறி தவிக்கும் கும்பலில் - நானும் ஒருவனாய்.... அரிசி முதல் ஆட்சி வரை கால் வலி முதல் கால்வாய் வரை சுற்றமே குற்றம் என... காந்தியா, நேதாஜியா? யார் சரி, யார் வலியவர் , பெரியவர்.. பட்டிமன்றங்களில் பட்டையை கிளப்பும் -நாங்கள் பீர் ஊற்றி சட்டை கழற்றி சுதந்திரமாய் கூச்சலிடும் காக்காய்கள் - இறுமாப்பு! " சுதந்திரம் பெற்றுவிட்டோமம்"... தாய் மடி(விலை நிலம்) விற்று தண்ணீருக்கும், தாணியத்துக்கும் தலை விரித்து, தாடி வளர்க்கும் தரம் உயர்ந்த முதலைகள் - நாங்கள் ஆம்!!! " சுதந்திரம் பெற்று விட்டோமாம்"... "தனி மனிதனுக்கு உணவில்லை என்றாள் ஜகத்தினை ஆழிப்போம்!!!" என்றான் பாரதி - என்னே ஒரு இறுமாப்பு!... நம் சமூகமே சாக்கடையாய், உணவின்றி அலையும் தருணம் சில பல ஆண்டுகளில் இருந்தும், சிரிப்போம் மரம் விற்று, பணம் வளர்ப்போம் நிலம் விற்று...ஏனென்றால் " நாம் சுதந்திரம் அடைந்துவிட்டோம்" இவை யாவும் தெரிந்தும், சகதியிலும், புழுதியிலும் நெளியும் சாக்கடை புழுவாய் தானிருந்தேன்.. சேற்றில் முளைத்த சில தாமர