Skip to main content

Posts

Showing posts from August, 2011

கை(ம்)பெண்!!!

கணவனை இழந்தவள் விதவையாம்??? அவளுக்கு உலகம் இட்ட பெயர் இதுவாம்... நெற்றி பொட்டு வைக்க தடையுண்டு, மறுமணம் செய்ய வழியுண்டு - ஆனால் பூவில்லா பூவையராய் மற்றிட்டோம், மதியற்று போய்விட்டோம் மனதளவில்... விதவை என்று சொல்லி ஏய்க்காதே,.. இந்த பெண்ணுக்கும் கைம்பெண் என்ற பொருளுண்டு அப்பெயரின் இரு மெய்ப்போல இவளுக்கும் இரு வாழ்வுண்டு.... கைப்பொம்மையாய் இப்பெண்களை ஆட்டிட்டோம் இனி புதுவாழ்வை தொட்டிட்ட வாழ்த்திடுவோம்...... .