உன்னுடன்!!! கால்நனைத்து, உடல் விதிர்த்து விளையாடிய நிமிடங்கள் - களவாடியதரோ? மணல் குழைத்து, கப்பல்விட்டு தவளையுடன் சப்தமிட்டு குரல்கட்டிய குயில்களாய் அலைந்தோமே? காதலி தொடுதலில்லா பரவசம் நீ தொட்டதும்!!! அவள் எனை நீங்கியதும் கண்ணில் கண்டேன் உனை... மும்மாரி இல்லையென்றாலும் விளைச்சல் நோக்கி வாழ்த்திட வருவாயே?... அணைகட்டி!!! ஆறாய் வரும் உனைத்தேக்கி ஆர்பரித்து, அல்லல்ப்படுத்தி அறியோனை இருப்பதனால் நீ பொய்த்துவிட்டயோ??? அடைப்பட்ட உருவமாய், நுகர்ந்துணர்ந்த மணமாய் தீங்கிழைக்கா வாழ்வதே வாழ்க்கையென உணர்த்திய - ஞானியே! நீயில்லா வாழ்வேது எமக்கு பொய்க்காதே பொய்த்துவிடும்- எங்கள் வாழ்க்கை...
தமிழ்பிரளயம்-Tamil Pralayam