Skip to main content

நண்பனைப் பற்றி!

இவன் பற்றி, இவன் கூறும்
இவையனைத்தும் இனியவையே!
உவமையுண்டு, உருவகமில்லை
உணர்வுண்டு, உருவமில்லை
நினைவுண்டு, நிழலில்லை
நிறைவோடு நிஜம் சொல்ல
தமிழன்றி வேறில்லை...

குயில் என்பேன் பாடக்கேட்டு,
அரி என்பேன் நகைக்க பார்த்து,
ஒளி, ஒலி, உணர் உணர்வால்
வரி வரியாய் வரைவேன் உனை....

இசையற்ற இசைவற்ற வாழ்க்கை என்பான்
இவன்பெற்ற, இவனைப்பெற்ற ரத்தினமே!
இணையில்லா இணைவில்லா இரு வாளம்,
சுதியில்லா, ஸ்ருதியில்லா ஓர் ஓலம்,
வழியில்லா , வலியில்லா,
உருமாறி, உறுமாறி
ருதுவான ருசியான ஓர் பயணமிவன்...

பெண்னகை புன்னகைப்பற்றி,
புன்னகை பெண்ணல்லன்,
உயர்உணரும் உயர்தினையன்
வழியற்று, விழிப்பற்று,
விழிபற்றி நீரோடு நின்றால்
உளிகொண்டு வழிகண்டு
ஒளி கொடுக்கும் கலங்கரையே!!!..

ஞாலத்தின் கோலத்தில், மாலத்தில்
தூரிகை ஓவியத்தில், பாடிய காவியத்தில்
வீரிய கானத்தில், மீட்டிய மோகனத்தில்
உணர்கிறேன்- உரைக்கிறேன் உனை
தமையனே, தோழனே-என்னின் காலனே
வாழ்க வளர்க- வானுள வானள...

.

Comments

  1. வார்த்தைகள் கோர்த்த விதம் ரொம்ப அருமையா இருக்கு

    ReplyDelete
  2. நன்றி தோழியே!... தாங்கள் தவறாமல் தொடர்ந்து எனது இடுகைகளை படித்து வருவதற்கு மற்றுமொரு நன்றி..

    ReplyDelete
  3. இன்றுதான் கண்டு கொண்டேன்.........அழகான கவி நயம் தமிழ் எனும் முத்தெடுத்து கோர்த்த கவிதை மாலை,அருமை பாராட்டுக்கள். உங்களிடம் நான் தமிழ் பயில் உங்கள்தளம் வருவேன்.சகோதரி நிலாமதி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பேருந்து!!!

பிறர் தடவினாலும்-உரசினாலும், இடம்விடாமல் இடை தடவினாலும் உயிருள்ள ஜடமாய் - நெரிசலாய் நெருக்கமாய் பயணிக்கும் - தமக்கையும் மார்கழி மாதமயினும் வெப்பமும், தொப்பமுமாய் நனைய - தமையனும்.... முதியோர் இருக்கையில் இளைஞன் அமர்ந்தும் கேட்க முடியா- பெற்றோரும்... மன ஊனத்தால் - உடல் ஊனத்தை ஏளனமாய் ஏய்க்கும் - பதறுகளும்... பணமே பலனென்று பொருள் திருடும் - திருடனும் திருப்தியாய்தான் வாழ்கின்றனர்... எத்தனை நிறம், எத்தனை மனிதம்,எதனை மிருகம்- நம்மில்.. கற்கிறேன் வாழ்க்கையை காலை மாலை பயணத்தில்...

பெண் என்பவள்!!!

வெட்கி குனிதல் நாணம்! ஈர்பல் நகைத்தல் வெட்கம்! விசும்பிய குரலும், சுருங்கிய விழியும் நேசம்! கோதிய விரலும் கோதுதல் பதமும் பாசம்! மக்கட்- அதட்டிய பின்பு, தானே அழுதிடும் கண்கள் சோகம்! பஞ்சனை மஞ்சத்தில் மேனி பசுந்தீ பரவலாய் மோகம்! தன்னுயிர் நீந்தீனும் மக்கட், பதி நினை மறவா- ஒரு தீரா தாபம்! தன் உடல் எரித்தும் ஒளி கொடுக்கும்- அவள் என்றும் அணையா உயிர் தீபம்!...
யார் இவள்!... பார்த்தவுடன் பதிந்தது இரண்டு.!   உதடு குவித்து பேசிய அழகும், உருட்டி மிரட்டிய விழியும்....   இதிலோர் அதிசியமா! இல்லையே... அழகோ? அறிவோ?  நகைத்தபடி, முடி கோதி சிந்தித்தால் புரியாத புன்முறுவலில் கிடைத்தது...ஆம் கேட்டவுடன் புரியாத அவள் பெயர்...  உலகுக்கு உண்மை உரைத்தவனின் உயிரானவளின் செல்ல பெயராம்!!! சிகப்பு வர்ணத்தை நாமத்தில் கொண்ட வெள்ளை மனதுக்காரி... பிரித்தால் பொருளில்லை இரட்டைகிளவியில், இரண்டாய் பகுத்தால் ஓற்பொருள் அடுக்குத்தொடரில்... ஆனால்!!! எலுத்துக்கோர் பொருளும்  பொருள் போல் இவள் வாழ்வும்!!! மைராவின் கசப்பும், ஹுமாவின் கற்பனா பறவையின் மனதும்...தான் உணர்ந்த இராவின் தனித்த கனத்த இதயமும்...குழப்பம் தானே?? வாழ்வே குழப்பம் தான்...தொடரும்  நிழலாய் இவள் உறவு....   உணர்ந்ததில் உண்மையில் - இவள்!! எத்தனை ஓட்டம் மனதிலும், கால்களிலும் விழிப்பற்றிய இதழ் சிரிப்பும் இதழ் குவிந்து விழிசுருங்கிய கோபமும் பதைப்பின்றிய பதட்டமும்.... விண் கிழித்தது பறக்க துடிக்கும் உத்வேகமும் வாண...