Skip to main content

நண்பனைப் பற்றி!

இவன் பற்றி, இவன் கூறும்
இவையனைத்தும் இனியவையே!
உவமையுண்டு, உருவகமில்லை
உணர்வுண்டு, உருவமில்லை
நினைவுண்டு, நிழலில்லை
நிறைவோடு நிஜம் சொல்ல
தமிழன்றி வேறில்லை...

குயில் என்பேன் பாடக்கேட்டு,
அரி என்பேன் நகைக்க பார்த்து,
ஒளி, ஒலி, உணர் உணர்வால்
வரி வரியாய் வரைவேன் உனை....

இசையற்ற இசைவற்ற வாழ்க்கை என்பான்
இவன்பெற்ற, இவனைப்பெற்ற ரத்தினமே!
இணையில்லா இணைவில்லா இரு வாளம்,
சுதியில்லா, ஸ்ருதியில்லா ஓர் ஓலம்,
வழியில்லா , வலியில்லா,
உருமாறி, உறுமாறி
ருதுவான ருசியான ஓர் பயணமிவன்...

பெண்னகை புன்னகைப்பற்றி,
புன்னகை பெண்ணல்லன்,
உயர்உணரும் உயர்தினையன்
வழியற்று, விழிப்பற்று,
விழிபற்றி நீரோடு நின்றால்
உளிகொண்டு வழிகண்டு
ஒளி கொடுக்கும் கலங்கரையே!!!..

ஞாலத்தின் கோலத்தில், மாலத்தில்
தூரிகை ஓவியத்தில், பாடிய காவியத்தில்
வீரிய கானத்தில், மீட்டிய மோகனத்தில்
உணர்கிறேன்- உரைக்கிறேன் உனை
தமையனே, தோழனே-என்னின் காலனே
வாழ்க வளர்க- வானுள வானள...

.

Comments

  1. வார்த்தைகள் கோர்த்த விதம் ரொம்ப அருமையா இருக்கு

    ReplyDelete
  2. நன்றி தோழியே!... தாங்கள் தவறாமல் தொடர்ந்து எனது இடுகைகளை படித்து வருவதற்கு மற்றுமொரு நன்றி..

    ReplyDelete
  3. இன்றுதான் கண்டு கொண்டேன்.........அழகான கவி நயம் தமிழ் எனும் முத்தெடுத்து கோர்த்த கவிதை மாலை,அருமை பாராட்டுக்கள். உங்களிடம் நான் தமிழ் பயில் உங்கள்தளம் வருவேன்.சகோதரி நிலாமதி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெண் என்பவள்!!!

வெட்கி குனிதல் நாணம்! ஈர்பல் நகைத்தல் வெட்கம்! விசும்பிய குரலும், சுருங்கிய விழியும் நேசம்! கோதிய விரலும் கோதுதல் பதமும் பாசம்! மக்கட்- அதட்டிய பின்பு, தானே அழுதிடும் கண்கள் சோகம்! பஞ்சனை மஞ்சத்தில் மேனி பசுந்தீ பரவலாய் மோகம்! தன்னுயிர் நீந்தீனும் மக்கட், பதி நினை மறவா- ஒரு தீரா தாபம்! தன் உடல் எரித்தும் ஒளி கொடுக்கும்- அவள் என்றும் அணையா உயிர் தீபம்!...

நீயா சொல்லும் வரை...

நினைக்கும் போது கூட     கண்ணில் நீர் வந்தது நீ என்னை கேட்க்கும் வரை,     கேட்ட கணத்தில் நின்றோதொரு நொடி     என் இயக்கமெல்லாம்.. கண்ணே என்றா     நன் அழைப்பேன், இல்லை, இல்லை     கன்னி எனை வென்ற கள்ளியா நீ     இல்லை, இல்லை துன்பங்கள் குறைத்தாய்    இன்பத்தில் இருக்கும்போது ஆம்! நீ என்னின் நிகழ்காலம்!...     சுற்றி வர நினைத்தேன் சுழற் காற்றாய்,     தடைபோட நினைத்தேன் அணைக்கட்டாய்,     சுழன்று கொண்டு அணைப்போட்டாய்     உன் நெஞ்சில்- எனக்கு... நீயா வந்து சொல்லும் வரை    நானா உரைப்பேன் உனைப்பற்றி என்    நெஞ்சில் உள்ளதை... .

மெகா கவியே!!!..

பெண்ணை இழித்தோரை    இடித்துவிட்டாய் உந்தன் இன்னிசை பாக்களால்,    நம்மை எதிர்த்தோரை துரத்திவிட்டாய்    உந்தன் வேட்க்கையால்... காக்கை, குருவி    எங்கள் ஜாதி என்றாய் உயிர் வாழும் ஒற்றுமையினாலா?    ஓடியாடும் பாப்பாக்கும், பாடி பறக்கும் குயிலுக்கும்    ஒரு பாட்டு பாடிச்சென்றாய் இந்த உலகில்... வெண்தலை முண்டாசும்,    கருநிற உடற்கோப்பும், கால்களிலே கட்டை செருப்பும்,    மார்தனிலே வீரமுழக்கமும், சிந்தையிலே விடுதலை வேட்கையுடன்,    வந்தாய் நீ... வீன்நேரம் வீட்டில்    கூட கழிக்காமல் விடுதலை வித்துக்கள்    விதைத்தாய் இவ்வுலகில்... வீறுகொண்டேழுந்தாய் விடுதலைக்காக    சீர் செய்திருந்தாய் உந்தன் சிந்தையை பேர் கொண்டாய் " மகா கவி சுப்ரமணிய பாரதி" என்றா இல்லை, இல்லை "மெகா கவி சூப்பர் மனிதன் பாரதி" என்று... நீ பிறந்ததும் விடுதலை    வேட்க்கை வந்ததா- இல்லை விடுதலை வேட்க்கைக்காக    நீ பிறந்து வந்...