Skip to main content

பெண் என்பவள்!!!

வெட்கி குனிதல்
நாணம்!
ஈர்பல் நகைத்தல்
வெட்கம்!

விசும்பிய குரலும்,
சுருங்கிய விழியும்
நேசம்!

கோதிய விரலும்
கோதுதல் பதமும்
பாசம்!

மக்கட்- அதட்டிய பின்பு,
தானே அழுதிடும் கண்கள்
சோகம்!

பஞ்சனை மஞ்சத்தில்
மேனி பசுந்தீ பரவலாய்
மோகம்!

தன்னுயிர் நீந்தீனும்
மக்கட், பதி
நினை மறவா- ஒரு தீரா
தாபம்!

தன் உடல் எரித்தும்
ஒளி கொடுக்கும்- அவள்
என்றும் அணையா உயிர்
தீபம்!...

Comments

  1. //தன் உடல் எரித்தும்
    ஒளி கொடுக்கும்- அவள்
    என்றும் அணையா உயிர்//

    சில வரிகளில் பெண்மையின் உன்னதத்தை அருமையா உணர்த்தி விட்டீர்கள்...நன்றி

    ReplyDelete
  2. அருமையான வரிகள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. @KOUSALYA: நன்றி தோழியே!..பார்கிறேன், உணர்கிறேன் பெண்களை..எண்ணின் தாயாய்,சகோதரியாய்,தோழியாய்...

    @dILIP: நன்றி நண்பா!...

    @NIS: நன்றி!!!

    ReplyDelete
  4. மிகவும் அருமை.. ஒவ்வொரு வரிகளும் சூப்பர்..

    ReplyDelete
  5. எல்லா வரிகளும் அருமை....

    ReplyDelete
  6. வரிகள் எல்லாம் மென்மையாவும்,இதமாகவும் இருக்கு அருண்:))

    ReplyDelete
  7. @பதிவுலகில் பாபு: நன்றி நண்பா..

    @ஆமினா:நன்றி தோழியே!..

    @ஆனந்தி:மிக்க நன்றி தோழியே!..

    ReplyDelete
  8. பெண் என்பவள்
    நீரை போல
    ஒரே நேரத்தில்
    உறையவும்
    கரையவும்
    அவளால் மட்டுமே இயலும்
    மனதை தொடுகின்ற வரிகள் :)

    ReplyDelete
  9. மறுக்க முடியாத உண்மை!.. நன்றி லல்லி..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெற்றோர்!!!!???

அணு அணுவாய் சேர்த்து துளி துளியாய் கோர்த்து ஓர் உருவாய், அவள் கருவாய் வளர்த்து - வலியின்றி எனை வலியோடு பிறப்பித்த அன்னையே உன் பாதம் தொட்ட ஓர் துளி நீரும் அமிர்தமே.....!!! பிடிப்பின்றி பிறந்த எனை படிபின்றி ஆக்காமல் குருதியை குழைத்து உணவாய் ஊட்டி - உடல் இளைத்தும், களைத்தும் மீண்டும் எனக்காய் பிறக்கும் தந்தையே தவமாய்! தவத்தின் வரனாய் பெற்றேன் உன்னை.....!!! வாழ்வேன் நான் வளமாய் உன் விழி சிரிக்க- அன்னை மடி குளிர.. வளர்வேன் இமயமாய் வானளவு வாழ்கையை எதிர்த்து! வீழ்ந்தாலும் உம் காலில் மட்டும்! நலமாய் வாழ, வளமாய் வாழ உங்கள் ஆசியுடன் துவங்குகிறேன் வாழ்கையை....!!!!!
யார் இவள்!... பார்த்தவுடன் பதிந்தது இரண்டு.!   உதடு குவித்து பேசிய அழகும், உருட்டி மிரட்டிய விழியும்....   இதிலோர் அதிசியமா! இல்லையே... அழகோ? அறிவோ?  நகைத்தபடி, முடி கோதி சிந்தித்தால் புரியாத புன்முறுவலில் கிடைத்தது...ஆம் கேட்டவுடன் புரியாத அவள் பெயர்...  உலகுக்கு உண்மை உரைத்தவனின் உயிரானவளின் செல்ல பெயராம்!!! சிகப்பு வர்ணத்தை நாமத்தில் கொண்ட வெள்ளை மனதுக்காரி... பிரித்தால் பொருளில்லை இரட்டைகிளவியில், இரண்டாய் பகுத்தால் ஓற்பொருள் அடுக்குத்தொடரில்... ஆனால்!!! எலுத்துக்கோர் பொருளும்  பொருள் போல் இவள் வாழ்வும்!!! மைராவின் கசப்பும், ஹுமாவின் கற்பனா பறவையின் மனதும்...தான் உணர்ந்த இராவின் தனித்த கனத்த இதயமும்...குழப்பம் தானே?? வாழ்வே குழப்பம் தான்...தொடரும்  நிழலாய் இவள் உறவு....   உணர்ந்ததில் உண்மையில் - இவள்!! எத்தனை ஓட்டம் மனதிலும், கால்களிலும் விழிப்பற்றிய இதழ் சிரிப்பும் இதழ் குவிந்து விழிசுருங்கிய கோபமும் பதைப்பின்றிய பதட்டமும்.... விண் கிழித்தது பறக்க துடிக்கும் உத்வேகமும் வாணோங்கி வாழதுடிக்கும் வலிமையும்...