Skip to main content

பெண் என்பவள்!!!

வெட்கி குனிதல்
நாணம்!
ஈர்பல் நகைத்தல்
வெட்கம்!

விசும்பிய குரலும்,
சுருங்கிய விழியும்
நேசம்!

கோதிய விரலும்
கோதுதல் பதமும்
பாசம்!

மக்கட்- அதட்டிய பின்பு,
தானே அழுதிடும் கண்கள்
சோகம்!

பஞ்சனை மஞ்சத்தில்
மேனி பசுந்தீ பரவலாய்
மோகம்!

தன்னுயிர் நீந்தீனும்
மக்கட், பதி
நினை மறவா- ஒரு தீரா
தாபம்!

தன் உடல் எரித்தும்
ஒளி கொடுக்கும்- அவள்
என்றும் அணையா உயிர்
தீபம்!...

Comments

  1. //தன் உடல் எரித்தும்
    ஒளி கொடுக்கும்- அவள்
    என்றும் அணையா உயிர்//

    சில வரிகளில் பெண்மையின் உன்னதத்தை அருமையா உணர்த்தி விட்டீர்கள்...நன்றி

    ReplyDelete
  2. அருமையான வரிகள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. @KOUSALYA: நன்றி தோழியே!..பார்கிறேன், உணர்கிறேன் பெண்களை..எண்ணின் தாயாய்,சகோதரியாய்,தோழியாய்...

    @dILIP: நன்றி நண்பா!...

    @NIS: நன்றி!!!

    ReplyDelete
  4. மிகவும் அருமை.. ஒவ்வொரு வரிகளும் சூப்பர்..

    ReplyDelete
  5. எல்லா வரிகளும் அருமை....

    ReplyDelete
  6. வரிகள் எல்லாம் மென்மையாவும்,இதமாகவும் இருக்கு அருண்:))

    ReplyDelete
  7. @பதிவுலகில் பாபு: நன்றி நண்பா..

    @ஆமினா:நன்றி தோழியே!..

    @ஆனந்தி:மிக்க நன்றி தோழியே!..

    ReplyDelete
  8. பெண் என்பவள்
    நீரை போல
    ஒரே நேரத்தில்
    உறையவும்
    கரையவும்
    அவளால் மட்டுமே இயலும்
    மனதை தொடுகின்ற வரிகள் :)

    ReplyDelete
  9. மறுக்க முடியாத உண்மை!.. நன்றி லல்லி..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெற்றோர்!!!!???

அணு அணுவாய் சேர்த்து துளி துளியாய் கோர்த்து ஓர் உருவாய், அவள் கருவாய் வளர்த்து - வலியின்றி எனை வலியோடு பிறப்பித்த அன்னையே உன் பாதம் தொட்ட ஓர் துளி நீரும் அமிர்தமே.....!!! பிடிப்பின்றி பிறந்த எனை படிபின்றி ஆக்காமல் குருதியை குழைத்து உணவாய் ஊட்டி - உடல் இளைத்தும், களைத்தும் மீண்டும் எனக்காய் பிறக்கும் தந்தையே தவமாய்! தவத்தின் வரனாய் பெற்றேன் உன்னை.....!!! வாழ்வேன் நான் வளமாய் உன் விழி சிரிக்க- அன்னை மடி குளிர.. வளர்வேன் இமயமாய் வானளவு வாழ்கையை எதிர்த்து! வீழ்ந்தாலும் உம் காலில் மட்டும்! நலமாய் வாழ, வளமாய் வாழ உங்கள் ஆசியுடன் துவங்குகிறேன் வாழ்கையை....!!!!!
சுதந்திரம்!!! நித்தம் நித்தம் குறை கூறி தற்பெருமை தலைக்கேறி தவிக்கும் கும்பலில் - நானும் ஒருவனாய்.... அரிசி முதல் ஆட்சி வரை கால் வலி முதல் கால்வாய் வரை சுற்றமே குற்றம் என... காந்தியா, நேதாஜியா? யார் சரி, யார் வலியவர் , பெரியவர்.. பட்டிமன்றங்களில் பட்டையை கிளப்பும் -நாங்கள் பீர் ஊற்றி சட்டை கழற்றி சுதந்திரமாய் கூச்சலிடும் காக்காய்கள் - இறுமாப்பு! " சுதந்திரம் பெற்றுவிட்டோமம்"... தாய் மடி(விலை நிலம்) விற்று தண்ணீருக்கும், தாணியத்துக்கும் தலை விரித்து, தாடி வளர்க்கும் தரம் உயர்ந்த முதலைகள் - நாங்கள் ஆம்!!! " சுதந்திரம் பெற்று விட்டோமாம்"... "தனி மனிதனுக்கு உணவில்லை என்றாள் ஜகத்தினை ஆழிப்போம்!!!" என்றான் பாரதி - என்னே ஒரு இறுமாப்பு!... நம் சமூகமே சாக்கடையாய், உணவின்றி அலையும் தருணம் சில பல ஆண்டுகளில் இருந்தும், சிரிப்போம் மரம் விற்று, பணம் வளர்ப்போம் நிலம் விற்று...ஏனென்றால் " நாம் சுதந்திரம் அடைந்துவிட்டோம்" இவை யாவும் தெரிந்தும், சகதியிலும், புழுதியிலும் நெளியும் சாக்கடை புழுவாய் தானிருந்தேன்.. சேற்றில் முளைத்த சில தாமர