Skip to main content

இந்தியா 2020 !!!

பெறுவோம் என்றா
நாம் நினைத்தோம்-சுதந்திரத்தை,
வேர்வை தியாகமல்ல பார்த்து ரசிக்க
பசுஞ்சோலை செந்நீரால் கழுவப்பட்ட
ஓர் காவியம்!- இந்தியா!

ஒளி உமிழும் கதிரவன்
அலையாடும் புயல்
வெடித்தெழும் எரிமலை
ஒன்றானால் இந்தியா!..

இணைசேரும் நதித்திட்டம் ஒன்றானால்
லஞ்சத்தின் நஞ்சுக்கள் பிடுங்கப்பட்டால்
தேசத்தின் மோசங்கள், அரசியலின் வேஷங்கள்
முன்னேறும் இந்தியா...
இணைப்போம் இளைஞர்
கைகள் வளர்ப்போம்
வெற்றியின் வித்துக்கள்
வாழ்வோம் வல்லரசாய்....

அக்னிசிறகென்றான் அப்துல்கலாம்
ஆசைக்கா இல்லை, இல்லை, உன்வேலைக்காக..
இளைஞனே விழித்திரு உன்கனவை விட்டு
எழுந்திரு வீறுக்கொண்டு, அடைந்திடுவோம் வெற்றி இந்தியா!!!...

கணினி கண்டான் சார்லஸ் போபெஜ்
கனவா உனக்கு? வேண்டாமே -எழுதிடு
நீ இந்தியன் அந்நியன் அல்ல..
இது முன்னேற்றமா? இல்லை இல்லை
இது ஒரு முன்னோடி...

இந்திய 2020 ஒரு கனா அல்ல
கண்ணிமைக்கும் சாதனை,
கனா என்றால் ஒரு கூட கணினியில்தான்...
பளபளக்கும் பட்ட தேவை,
முகம்பார்க்கும் ஆடியா தேவை
பார்த்திடு சாலையை..
ஆகாய ஏரோட்டம்
அலைப்பாய வெண்ணிலவு,
விளையாட ஓர் செவ்வாய்..

அன்புக்கு அன்னை, அறிவுக்கு ஆசான்
நிலவுக்கு ஆம்ஸ்ட்ராங், வெற்றிக்கு இந்தியா!!!...

சில வேண்டும் சீர்படுத்த,
பல வேண்டும் துரத்திட
திண்டாட்டம் ஒன்றெனில்
கண்டறிய விந்தைகளே!..

பறக்கின்ற பறவையா, பறக்கும் தட்டா
தந்திடுவோம் நிகரில்லா,
வெடிக்கும் ஓரணுவா? வேண்டாமே
சிரிக்கும் சிறுகுழந்தை
சிந்திக்கும் அறிவியலை,
அரசியலிலா ஓர் இந்தியா,
விலையில்லா ஓரன்பு, மதியில்லா
குழந்தையா எண்ணிப்பார் ஏமாற்றமே!

ஆம்ம் இந்தியா 2020 !!!..


.

Comments

  1. எத்தனை கனவுகள் கண்டாலும்
    எல்லாமே கனவுகள் மட்டும் தான்
    நிஜத்தில் பொழுது மட்டுமே விடிகிறது
    மனிதனின் துன்பங்கள் அல்ல!
    என்றாலும் போராடுவோம் :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெண் என்பவள்!!!

வெட்கி குனிதல் நாணம்! ஈர்பல் நகைத்தல் வெட்கம்! விசும்பிய குரலும், சுருங்கிய விழியும் நேசம்! கோதிய விரலும் கோதுதல் பதமும் பாசம்! மக்கட்- அதட்டிய பின்பு, தானே அழுதிடும் கண்கள் சோகம்! பஞ்சனை மஞ்சத்தில் மேனி பசுந்தீ பரவலாய் மோகம்! தன்னுயிர் நீந்தீனும் மக்கட், பதி நினை மறவா- ஒரு தீரா தாபம்! தன் உடல் எரித்தும் ஒளி கொடுக்கும்- அவள் என்றும் அணையா உயிர் தீபம்!...

பெற்றோர்!!!!???

அணு அணுவாய் சேர்த்து துளி துளியாய் கோர்த்து ஓர் உருவாய், அவள் கருவாய் வளர்த்து - வலியின்றி எனை வலியோடு பிறப்பித்த அன்னையே உன் பாதம் தொட்ட ஓர் துளி நீரும் அமிர்தமே.....!!! பிடிப்பின்றி பிறந்த எனை படிபின்றி ஆக்காமல் குருதியை குழைத்து உணவாய் ஊட்டி - உடல் இளைத்தும், களைத்தும் மீண்டும் எனக்காய் பிறக்கும் தந்தையே தவமாய்! தவத்தின் வரனாய் பெற்றேன் உன்னை.....!!! வாழ்வேன் நான் வளமாய் உன் விழி சிரிக்க- அன்னை மடி குளிர.. வளர்வேன் இமயமாய் வானளவு வாழ்கையை எதிர்த்து! வீழ்ந்தாலும் உம் காலில் மட்டும்! நலமாய் வாழ, வளமாய் வாழ உங்கள் ஆசியுடன் துவங்குகிறேன் வாழ்கையை....!!!!!
சுதந்திரம்!!! நித்தம் நித்தம் குறை கூறி தற்பெருமை தலைக்கேறி தவிக்கும் கும்பலில் - நானும் ஒருவனாய்.... அரிசி முதல் ஆட்சி வரை கால் வலி முதல் கால்வாய் வரை சுற்றமே குற்றம் என... காந்தியா, நேதாஜியா? யார் சரி, யார் வலியவர் , பெரியவர்.. பட்டிமன்றங்களில் பட்டையை கிளப்பும் -நாங்கள் பீர் ஊற்றி சட்டை கழற்றி சுதந்திரமாய் கூச்சலிடும் காக்காய்கள் - இறுமாப்பு! " சுதந்திரம் பெற்றுவிட்டோமம்"... தாய் மடி(விலை நிலம்) விற்று தண்ணீருக்கும், தாணியத்துக்கும் தலை விரித்து, தாடி வளர்க்கும் தரம் உயர்ந்த முதலைகள் - நாங்கள் ஆம்!!! " சுதந்திரம் பெற்று விட்டோமாம்"... "தனி மனிதனுக்கு உணவில்லை என்றாள் ஜகத்தினை ஆழிப்போம்!!!" என்றான் பாரதி - என்னே ஒரு இறுமாப்பு!... நம் சமூகமே சாக்கடையாய், உணவின்றி அலையும் தருணம் சில பல ஆண்டுகளில் இருந்தும், சிரிப்போம் மரம் விற்று, பணம் வளர்ப்போம் நிலம் விற்று...ஏனென்றால் " நாம் சுதந்திரம் அடைந்துவிட்டோம்" இவை யாவும் தெரிந்தும், சகதியிலும், புழுதியிலும் நெளியும் சாக்கடை புழுவாய் தானிருந்தேன்.. சேற்றில் முளைத்த சில தாமர