Skip to main content

மழலை தூக்கம்...

கண்விழிக்கும் நிலவின் முகமே! கலைந்திடாய்
              உன் தூக்கத்தை, உன் உருள் பிறள்
அசைவுகளால் வரையப்பட்டிருக்கும்
             கசங்கிய கம்பளியே நான்..
விக்கித்து பார்க்கிறேன்
             உன் தூங்கும் அழகை...

உன் இதழ் பாதம்
           எனை களைத்த போதும்
உன் சிற்றுடல்
          நனைத்த போதும்
இரசிக்கிறேன் இந்த
          மழலை வேந்தன்....

சிரம் வலிக்கா பூவணையாய்
           நானிருந்தேன் சிரத்துக்கு,
நீயோ! நான் வலியா
           பூமலராய் பூத்துக்கொண்டிருக்கின்றாய் ...

உனை சுடுவிடா, விழித்திறல் திறந்துவிடா
              சூரியனாய் முயற்சித்தேன்
முடியாமல் போனதடா!
             என் முல்லைப்பல்
சிரிப்பழகே!!!

விளித்திரள் வழிநீரும்
உதடழகின் உமிழ் நீரும்
நீ நனைத்த கம்பளியும்,
மெத்தென தலையணையும்,
விழித்தெழ செயம் சூரியனும்
ரசித்துதான் பார்க்கின்றன
உன் தூக்கத்தின்
நெளி, சுழி அழகுகளை-
தூங்காமல்.....

Comments

  1. நல்ல இருக்கு
    இந்த மாதிரி எல்லாம் எனக்கு எழுத வராது நண்பா

    ReplyDelete

Post a Comment