Skip to main content

பெற்றோர்!!!!???

அணு அணுவாய் சேர்த்து

துளி துளியாய் கோர்த்து

ஓர் உருவாய், அவள் கருவாய்

வளர்த்து - வலியின்றி எனை

வலியோடு பிறப்பித்த அன்னையே

உன் பாதம் தொட்ட

ஓர் துளி நீரும் அமிர்தமே.....!!!



பிடிப்பின்றி பிறந்த எனை

படிபின்றி ஆக்காமல்

குருதியை குழைத்து உணவாய்

ஊட்டி - உடல் இளைத்தும்,

களைத்தும் மீண்டும் எனக்காய்

பிறக்கும் தந்தையே

தவமாய்! தவத்தின் வரனாய்

பெற்றேன் உன்னை.....!!!



வாழ்வேன் நான் வளமாய்

உன் விழி சிரிக்க- அன்னை

மடி குளிர.. வளர்வேன் இமயமாய்

வானளவு வாழ்கையை எதிர்த்து!

வீழ்ந்தாலும் உம் காலில் மட்டும்!

நலமாய் வாழ, வளமாய் வாழ

உங்கள் ஆசியுடன் துவங்குகிறேன் வாழ்கையை....!!!!!

Comments

  1. //பிடிப்பின்றி பிறந்த எனை
    படிபின்றி ஆக்காமல் //

    super

    ReplyDelete
  2. மிக்க நன்றி! நாம் கண்கூட பார்த்ததுதான்... அப்பா, அம்மா இருவரால்தான் நாம் இன்று நல்ல நிலைமையில் உள்ளோம்..அதை என்றும் மறக்கவேண்டாம் என்றுதான்..எனது என்னத்தை பதிவு செய்தேன்... BLOG ல் வரும் பதிவுகளை பார்த்து தவறு இருந்தால் எனக்கு குறிப்பு கொடுங்கள்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சுதந்திரம்!!! நித்தம் நித்தம் குறை கூறி தற்பெருமை தலைக்கேறி தவிக்கும் கும்பலில் - நானும் ஒருவனாய்.... அரிசி முதல் ஆட்சி வரை கால் வலி முதல் கால்வாய் வரை சுற்றமே குற்றம் என... காந்தியா, நேதாஜியா? யார் சரி, யார் வலியவர் , பெரியவர்.. பட்டிமன்றங்களில் பட்டையை கிளப்பும் -நாங்கள் பீர் ஊற்றி சட்டை கழற்றி சுதந்திரமாய் கூச்சலிடும் காக்காய்கள் - இறுமாப்பு! " சுதந்திரம் பெற்றுவிட்டோமம்"... தாய் மடி(விலை நிலம்) விற்று தண்ணீருக்கும், தாணியத்துக்கும் தலை விரித்து, தாடி வளர்க்கும் தரம் உயர்ந்த முதலைகள் - நாங்கள் ஆம்!!! " சுதந்திரம் பெற்று விட்டோமாம்"... "தனி மனிதனுக்கு உணவில்லை என்றாள் ஜகத்தினை ஆழிப்போம்!!!" என்றான் பாரதி - என்னே ஒரு இறுமாப்பு!... நம் சமூகமே சாக்கடையாய், உணவின்றி அலையும் தருணம் சில பல ஆண்டுகளில் இருந்தும், சிரிப்போம் மரம் விற்று, பணம் வளர்ப்போம் நிலம் விற்று...ஏனென்றால் " நாம் சுதந்திரம் அடைந்துவிட்டோம்" இவை யாவும் தெரிந்தும், சகதியிலும், புழுதியிலும் நெளியும் சாக்கடை புழுவாய் தானிருந்தேன்.. சேற்றில் முளைத்த சில தாமர

தீபாவளி!!!!

ஆவளியாய் ஆயிரம் தீபமும், ஆனந்தமாய் அலையாடும் பெண்டீரும்,   பின் சுற்றும் காளையரும்... ஆசையாசையாய் வாங்கிய மத்தாப்பும், பட்டாசும், அரைதூக்க காலை- எண்ணெய் குளியலும், அம்மா சுட்ட பலகாரமும்  நண்பர்களுடன் அரட்டையுமாய்- இனிய தீபாவளி இன்றோ??? இவையாவும் காலப்பெட்டகத்தில்...             ஆம்!!! "வணக்கம் தமிழகம் துவங்கி, புதிய படப்பாடல் பார்த்து,  திரைக்கு வந்தே சில மாதங்களான  சிறப்பு படம் என" - சீரும் சிறப்பும் இல்லாமல் கழிகிறது இன்றைய தீபாவளி- கடையில் வாங்கிய இனிப்புகளுடன்...