புத்தினம் புதினமாய்
புத்தியில் புனிதமாய்
புலரட்டும் ....
புதுமையோ, புலமையோ
சிறுமையோ, சிந்தனையோ
வளமையோ, வறுமையோ
வாழ்வது நமக்கா கட்டும்....
இறந்த காலம்!!!
இறவாமல் இருக்கட்டும் நினைவுகளில்...
நிகழ்காலம்!!!
இனி நிழலாய் இருக்கட்டும்
நண்பர்கள் படைசூழ....
இத்தினதிலோர் உறுதி...!
" செய்வன திருந்த செய்வோம்
செய்ததை கடை பிடிப்போம்"....
சிந்தையில் செம்மையாய்
செழுமையை வாழ,
நமக்கு வாழ்வளித்த
தெய்வங்களுக்கு " பாதம் தொட்டு
கோடி நமஸ்காரங்கள்"....
------இவன்
இள.அருண் குமார்
//நமக்கு வாழ்வளித்த
ReplyDeleteதெய்வங்களுக்கு " பாதம் தொட்டு
கோடி நமஸ்காரங்கள்"....//
super