Skip to main content
சுதந்திரம்!!!
நித்தம் நித்தம் குறை கூறி
தற்பெருமை தலைக்கேறி
தவிக்கும் கும்பலில் - நானும் ஒருவனாய்....

அரிசி முதல் ஆட்சி வரை
கால் வலி முதல் கால்வாய் வரை
சுற்றமே குற்றம் என...

காந்தியா, நேதாஜியா?
யார் சரி, யார் வலியவர் , பெரியவர்..
பட்டிமன்றங்களில் பட்டையை கிளப்பும் -நாங்கள்
பீர் ஊற்றி சட்டை கழற்றி
சுதந்திரமாய் கூச்சலிடும் காக்காய்கள் - இறுமாப்பு!
" சுதந்திரம் பெற்றுவிட்டோமம்"...

தாய் மடி(விலை நிலம்) விற்று
தண்ணீருக்கும், தாணியத்துக்கும்
தலை விரித்து, தாடி வளர்க்கும்
தரம் உயர்ந்த முதலைகள் - நாங்கள்
ஆம்!!! " சுதந்திரம் பெற்று விட்டோமாம்"...

"தனி மனிதனுக்கு உணவில்லை
என்றாள் ஜகத்தினை ஆழிப்போம்!!!"
என்றான் பாரதி - என்னே ஒரு இறுமாப்பு!...

நம் சமூகமே சாக்கடையாய்,
உணவின்றி அலையும் தருணம்
சில பல ஆண்டுகளில்
இருந்தும், சிரிப்போம் மரம் விற்று,
பணம் வளர்ப்போம் நிலம் விற்று...ஏனென்றால்
" நாம் சுதந்திரம் அடைந்துவிட்டோம்"

இவை யாவும் தெரிந்தும், சகதியிலும், புழுதியிலும்
நெளியும் சாக்கடை புழுவாய் தானிருந்தேன்..
சேற்றில் முளைத்த சில தாமரைகள் பார்க்கும் வரை,
முள்நடுவில் முளைத்த சில ரோஜாக்கள் நுகரும் வரை...

உணர்ந்தறிந்து பின்பற்ற
விவேகானந்த்தரோ, புத்தரோ தேவையிலை
இந்த "தைரியவான்கள் போதும்
(" Masanamuthu Arunachalam Ra Aravindh
Nambi Loyola Durga Greens)நம்மில் மாற்றம் காண...

இயற்கையோடு இயைந்து, அதை
பாதுகாத்து வாழ்வதே " சுதந்திரம்" - என
உணர வைத்த நண்பர்களுக்கு
மனமார்ந்த வாழ்த்துகள்.....
    .

Comments

Popular posts from this blog

பேருந்து!!!

பிறர் தடவினாலும்-உரசினாலும், இடம்விடாமல் இடை தடவினாலும் உயிருள்ள ஜடமாய் - நெரிசலாய் நெருக்கமாய் பயணிக்கும் - தமக்கையும் மார்கழி மாதமயினும் வெப்பமும், தொப்பமுமாய் நனைய - தமையனும்.... முதியோர் இருக்கையில் இளைஞன் அமர்ந்தும் கேட்க முடியா- பெற்றோரும்... மன ஊனத்தால் - உடல் ஊனத்தை ஏளனமாய் ஏய்க்கும் - பதறுகளும்... பணமே பலனென்று பொருள் திருடும் - திருடனும் திருப்தியாய்தான் வாழ்கின்றனர்... எத்தனை நிறம், எத்தனை மனிதம்,எதனை மிருகம்- நம்மில்.. கற்கிறேன் வாழ்க்கையை காலை மாலை பயணத்தில்...
யார் இவள்!... பார்த்தவுடன் பதிந்தது இரண்டு.!   உதடு குவித்து பேசிய அழகும், உருட்டி மிரட்டிய விழியும்....   இதிலோர் அதிசியமா! இல்லையே... அழகோ? அறிவோ?  நகைத்தபடி, முடி கோதி சிந்தித்தால் புரியாத புன்முறுவலில் கிடைத்தது...ஆம் கேட்டவுடன் புரியாத அவள் பெயர்...  உலகுக்கு உண்மை உரைத்தவனின் உயிரானவளின் செல்ல பெயராம்!!! சிகப்பு வர்ணத்தை நாமத்தில் கொண்ட வெள்ளை மனதுக்காரி... பிரித்தால் பொருளில்லை இரட்டைகிளவியில், இரண்டாய் பகுத்தால் ஓற்பொருள் அடுக்குத்தொடரில்... ஆனால்!!! எலுத்துக்கோர் பொருளும்  பொருள் போல் இவள் வாழ்வும்!!! மைராவின் கசப்பும், ஹுமாவின் கற்பனா பறவையின் மனதும்...தான் உணர்ந்த இராவின் தனித்த கனத்த இதயமும்...குழப்பம் தானே?? வாழ்வே குழப்பம் தான்...தொடரும்  நிழலாய் இவள் உறவு....   உணர்ந்ததில் உண்மையில் - இவள்!! எத்தனை ஓட்டம் மனதிலும், கால்களிலும் விழிப்பற்றிய இதழ் சிரிப்பும் இதழ் குவிந்து விழிசுருங்கிய கோபமும் பதைப்பின்றிய பதட்டமும்.... விண் கிழித்தது பறக்க துடிக்கும் உத்வேகமும் வாண...

நிராகரிப்பு!!!!

அவனும் வேண்டாம் அவனென்றால் எதுவும் வேண்டாமாம்! தன்னிலை தாழாமலும் பெண்ணிலை குறையாமலும் கூறினாள்... என்ன உக்கிரம்!!!... வழிபார்த்து விழியாக வாசல் வந்தேன்- கூறிய செவிரெண்டும் விழுங்கியவை யாவும் தாக்கின மின்னலாய், வழியுமுன் உள்ளடக்கிய விழியாய், விழி நிமிர்த்தி நான் கண்டேன் என்னவள்- சென்னிலவாய் கோபத்தில்...! நகைத்த இதழும் கனத்த இதயமுமாய் கண் நீர் சிரிக்க விடைப்பெற்றாள் விரைவாக.. தடுமாறிய இதயமும் தடம்மாறிடா உறவுமாய் நிமிர்ந்த சிரமும் தாழ்ந்த விழியுமாய் நான்... குறிப்பறிந்து குறைகூறா மனதுடன், என் வலியை வழியனுப்பி, என்னவள் வலி உணர்துனர்ந்தேன்... கட்டுபாடற்ற கலங்கிய விழி அணையுடைத்து- அரங்கேற்றியது கண்ணீர் மழையை என்னவளுக்காய்... வெட்க்குகிறேன் நான், நடந்து முடியா வார்த்தைகளுக்கும் அரங்கேறிய நாடகத்துக்கும்... நிச்சயமாய்!!! அவள்- என்னவள்தான் என் நெஞ்சின் அறையில் நான்! - அவளுக்கில்லை ஆம்ம்...! அவளுக்கானவன் நானில்லை- இருந்தும் அவளை நிராகரிக்க முடியவில்லை, அவள்!- என்னின் அலைகழிக்க முடியா " இதய துடிப்பு " .... .