Skip to main content

நானும் நீயும்...!!!

புரியவில்லை எனக்கு - நானா?! உனக்கு எழுதுகிறேன் என்று
நினைக்கும் பொழுது, புரிதலுக்கும், பழகுதலுக்கும் மட்டுமே
பயன் படுத்திய தமிழில்.... ஆச்சர்யம் தான்!!..
ஆனாலும் ஓர் நிறைவு,
உனை பற்றிய, இல்லை இல்லை
நமைப்பற்றிய என்னின் முதல் கிறுக்கலில்....

மாடர்ன்களுக்ம்  ஃபேஷன்களுக்கும், இடையே, முழு நிலவாய்
   பூரணமாய் பிறந்தவள் - நான்!!!
கோடையில் மார்கழியாய், கோடியில் ஒருவனாய்
  ஹரிநாமத்தில் பிறந்தவன்- நீ!!!

பீமனோ, சூரனோ, பார்க்கத்தான் அப்படி

   முகம்
மறைக்கும் இதழ் சிரிப்பும்
விழி, விரிவழிய கனிவும் கண்டேன் உனில்!!!

சொப்பு வைத்தாடியதெல்லாம்
   செப்பிலக்கிய காலம்- மழலையாய்
விரல் பிடித்து நடந்ததில்லை
   நிழலாடி திரிந்ததில்லை- இருந்தாலென்ன!!!
மனநிறைவாய் மணமுடித்தவுடன்
  விரல் பிடித்து நிழலாடுவோம்- மழலையாய்...

தூது, உலா பற்றி கேட்டதாய் நியாபகம்,
  தலைவன் கடல் தாண்டி சென்றால்
தன் நிலைப்பற்றி கூற,புறா           
  அனுப்புதலாம்...ஆம்!!!
 உணர்ந்தேன் நான்..!!

  Gatget -ல் WhatsAppம்,
      Skype -மாய் நாம்      கதைத்தபொழுது...!
முகம் பார்க்க VideoChat-ம், நிழல் பார்க்க Facebook மாய்
   நாம் இருந்தோம் நிகழ் காலத்தில் நிறை நினைவோடு,
 நினைத்தால் இன்றும்  மனம் மலரும்...!!!

வெளிர் நிற வானும், கடலுமிருந்தும்
வேலையில் நீ - நீயுமாய்!!

Car -ம், கடமையும், தோழமையிருந்தும்
கண் நிறை கனவோடு
நான்நானுமாய்!!! வாழ்ந்திட்டோம்....

நிழலோடு நிழலாடி, விளையாடிய நாட்கள்,
நினைவோடு நிறைவாக மாறிடுமே,
நீயென்ற நானும், நானென்ற நீயும்-மனம் இணைந்து, விரல் பிடிக்கும்
     அந்நாளில்..."நாமாக" மாறும்பொழுது

விழி நிறைய, மனம் நிறைய எதிர் பார்க்கும் " நாம் - நாமாக"!!!....

.

Comments

Popular posts from this blog

பெண் என்பவள்!!!

வெட்கி குனிதல் நாணம்! ஈர்பல் நகைத்தல் வெட்கம்! விசும்பிய குரலும், சுருங்கிய விழியும் நேசம்! கோதிய விரலும் கோதுதல் பதமும் பாசம்! மக்கட்- அதட்டிய பின்பு, தானே அழுதிடும் கண்கள் சோகம்! பஞ்சனை மஞ்சத்தில் மேனி பசுந்தீ பரவலாய் மோகம்! தன்னுயிர் நீந்தீனும் மக்கட், பதி நினை மறவா- ஒரு தீரா தாபம்! தன் உடல் எரித்தும் ஒளி கொடுக்கும்- அவள் என்றும் அணையா உயிர் தீபம்!...

நீயா சொல்லும் வரை...

நினைக்கும் போது கூட     கண்ணில் நீர் வந்தது நீ என்னை கேட்க்கும் வரை,     கேட்ட கணத்தில் நின்றோதொரு நொடி     என் இயக்கமெல்லாம்.. கண்ணே என்றா     நன் அழைப்பேன், இல்லை, இல்லை     கன்னி எனை வென்ற கள்ளியா நீ     இல்லை, இல்லை துன்பங்கள் குறைத்தாய்    இன்பத்தில் இருக்கும்போது ஆம்! நீ என்னின் நிகழ்காலம்!...     சுற்றி வர நினைத்தேன் சுழற் காற்றாய்,     தடைபோட நினைத்தேன் அணைக்கட்டாய்,     சுழன்று கொண்டு அணைப்போட்டாய்     உன் நெஞ்சில்- எனக்கு... நீயா வந்து சொல்லும் வரை    நானா உரைப்பேன் உனைப்பற்றி என்    நெஞ்சில் உள்ளதை... .

மெகா கவியே!!!..

பெண்ணை இழித்தோரை    இடித்துவிட்டாய் உந்தன் இன்னிசை பாக்களால்,    நம்மை எதிர்த்தோரை துரத்திவிட்டாய்    உந்தன் வேட்க்கையால்... காக்கை, குருவி    எங்கள் ஜாதி என்றாய் உயிர் வாழும் ஒற்றுமையினாலா?    ஓடியாடும் பாப்பாக்கும், பாடி பறக்கும் குயிலுக்கும்    ஒரு பாட்டு பாடிச்சென்றாய் இந்த உலகில்... வெண்தலை முண்டாசும்,    கருநிற உடற்கோப்பும், கால்களிலே கட்டை செருப்பும்,    மார்தனிலே வீரமுழக்கமும், சிந்தையிலே விடுதலை வேட்கையுடன்,    வந்தாய் நீ... வீன்நேரம் வீட்டில்    கூட கழிக்காமல் விடுதலை வித்துக்கள்    விதைத்தாய் இவ்வுலகில்... வீறுகொண்டேழுந்தாய் விடுதலைக்காக    சீர் செய்திருந்தாய் உந்தன் சிந்தையை பேர் கொண்டாய் " மகா கவி சுப்ரமணிய பாரதி" என்றா இல்லை, இல்லை "மெகா கவி சூப்பர் மனிதன் பாரதி" என்று... நீ பிறந்ததும் விடுதலை    வேட்க்கை வந்ததா- இல்லை விடுதலை வேட்க்கைக்காக    நீ பிறந்து வந்...