புரியவில்லை எனக்கு - நானா?! உனக்கு எழுதுகிறேன்
என்று
முகம் மறைக்கும் இதழ் சிரிப்பும்
விழி, விரி –வழிய கனிவும் கண்டேன் உனில்!!!
நினைக்கும் பொழுது, புரிதலுக்கும், பழகுதலுக்கும்
மட்டுமே
பயன் படுத்திய தமிழில்....
ஆச்சர்யம் தான்!!..
ஆனாலும் ஓர் நிறைவு,
உனை பற்றிய, இல்லை
இல்லை
நமைப்பற்றிய என்னின் முதல் கிறுக்கலில்....
மாடர்ன்களுக்ம் ஃபேஷன்களுக்கும்,
இடையே, முழு நிலவாய்
பூரணமாய் பிறந்தவள்
- நான்!!!
கோடையில் மார்கழியாய், கோடியில் ஒருவனாய்
ஹரிநாமத்தில் பிறந்தவன்-
நீ!!!
பீமனோ, சூரனோ, பார்க்கத்தான் அப்படி
முகம் மறைக்கும் இதழ் சிரிப்பும்
விழி, விரி –வழிய கனிவும் கண்டேன் உனில்!!!
சொப்பு வைத்தாடியதெல்லாம்
செப்பிலக்கிய காலம்-
மழலையாய்
விரல் பிடித்து நடந்ததில்லை
நிழலாடி திரிந்ததில்லை-
இருந்தாலென்ன!!!
மனநிறைவாய் மணமுடித்தவுடன்
விரல் பிடித்து
நிழலாடுவோம்- மழலையாய்...
தூது, உலா பற்றி கேட்டதாய் நியாபகம்,
தலைவன் கடல் தாண்டி சென்றால்
தன் நிலைப்பற்றி கூற,புறா
அனுப்புதலாம்...ஆம்!!!
தூது, உலா பற்றி கேட்டதாய் நியாபகம்,
தலைவன் கடல் தாண்டி சென்றால்
தன் நிலைப்பற்றி கூற,புறா
அனுப்புதலாம்...ஆம்!!!
உணர்ந்தேன்
நான்..!!
Gatget -ல் WhatsApp –ம்,
Skype -மாய்
நாம் கதைத்தபொழுது...!
முகம் பார்க்க
VideoChat-ம், நிழல் பார்க்க Facebook மாய்
நாம் இருந்தோம் நிகழ் காலத்தில் நிறை நினைவோடு,
நினைத்தால்
இன்றும் மனம் மலரும்...!!!
வெளிர்
நிற வானும், கடலுமிருந்தும்
வேலையில்
நீ - நீயுமாய்!!
Car
-ம், கடமையும், தோழமையிருந்தும்
கண்
நிறை கனவோடு
நான்
- நானுமாய்!!!
வாழ்ந்திட்டோம்....
நிழலோடு
நிழலாடி, விளையாடிய நாட்கள்,
நினைவோடு
நிறைவாக மாறிடுமே,
நீயென்ற
நானும், நானென்ற நீயும்-மனம் இணைந்து,
விரல் பிடிக்கும்
அந்நாளில்..."நாமாக" மாறும்பொழுது
விழி
நிறைய, மனம் நிறைய எதிர் பார்க்கும்
" நாம் - நாமாக"!!!....
.
Comments
Post a Comment