Skip to main content

காதல(லாய் ஓர்)ர் தினம்....


முன் நின்று, முதல் பார்த்து
     முறுவலித்து - பின் சென்று
வழிப்பார்த்து, விழியால்
    நகைத் தெல்லாம் ஓர் காலம்....

ஆம்!!!! அன்றெல்லாம்

" யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்க்காகால்
  தானோக்கி மெல்ல தகும்"

    என்றோம் வள்ளுவன் வழியாய்...

விரல் வலிக்க எழுதியும்,
    கால் வலிக்க காத்திருந்தும்,
கனத்த இதயமும்
   கையில் கடிதமுமாய்
காதல் செய்தோம்....

வலியிருந்தது அனால் வழியில்லை
    இணை சேர..- எத்தனை
எத்தனை தடைகள்
    " சாதி என்றான், பேதமென்றான்
மதம் என்றான், குலமென்றான்
    பணமென்றான்"- பகட்டாய்...

இன்றும் இவை இருக்கிறது
    யார் இல்லை என்றார்....

காதலை கனினியிலும், கைபேசியிலும்
   கதைத்தோ, குறுந்தகவல்
கொடுத்தோ, பெற்றோ மகிழ்கிறோம்...
   இதுவா காதல்..?

" கண்களவு கொள்ளும் சிறுநோக்கும் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது"...- இதுவல்லவே...!!!

பிழை கூறவில்லை நான்!
    மண்ணில் சிலர் உளர்...
யாம் வேண்டுவதெல்லாம் ,
    " பெற்றோர் நிராகரித்தலும்,
      பிள்ளைகள் விரட்டுதலும்" வேண்டாமே?...
     அன்பும், அரவணைப்பும்
பொறுமையும், விட்டுகொடுத்தலுமே காதல்...

காதல் தினமும் தேவை, பின்
     எதற்கோர் தனி காதலர் தினம்,
வாழ்வோம் " காதலாய் ஒவ்வோர் தினமும், கணமும்"...

.

Comments

Popular posts from this blog

பெண் என்பவள்!!!

வெட்கி குனிதல் நாணம்! ஈர்பல் நகைத்தல் வெட்கம்! விசும்பிய குரலும், சுருங்கிய விழியும் நேசம்! கோதிய விரலும் கோதுதல் பதமும் பாசம்! மக்கட்- அதட்டிய பின்பு, தானே அழுதிடும் கண்கள் சோகம்! பஞ்சனை மஞ்சத்தில் மேனி பசுந்தீ பரவலாய் மோகம்! தன்னுயிர் நீந்தீனும் மக்கட், பதி நினை மறவா- ஒரு தீரா தாபம்! தன் உடல் எரித்தும் ஒளி கொடுக்கும்- அவள் என்றும் அணையா உயிர் தீபம்!...

நீயா சொல்லும் வரை...

நினைக்கும் போது கூட     கண்ணில் நீர் வந்தது நீ என்னை கேட்க்கும் வரை,     கேட்ட கணத்தில் நின்றோதொரு நொடி     என் இயக்கமெல்லாம்.. கண்ணே என்றா     நன் அழைப்பேன், இல்லை, இல்லை     கன்னி எனை வென்ற கள்ளியா நீ     இல்லை, இல்லை துன்பங்கள் குறைத்தாய்    இன்பத்தில் இருக்கும்போது ஆம்! நீ என்னின் நிகழ்காலம்!...     சுற்றி வர நினைத்தேன் சுழற் காற்றாய்,     தடைபோட நினைத்தேன் அணைக்கட்டாய்,     சுழன்று கொண்டு அணைப்போட்டாய்     உன் நெஞ்சில்- எனக்கு... நீயா வந்து சொல்லும் வரை    நானா உரைப்பேன் உனைப்பற்றி என்    நெஞ்சில் உள்ளதை... .

மெகா கவியே!!!..

பெண்ணை இழித்தோரை    இடித்துவிட்டாய் உந்தன் இன்னிசை பாக்களால்,    நம்மை எதிர்த்தோரை துரத்திவிட்டாய்    உந்தன் வேட்க்கையால்... காக்கை, குருவி    எங்கள் ஜாதி என்றாய் உயிர் வாழும் ஒற்றுமையினாலா?    ஓடியாடும் பாப்பாக்கும், பாடி பறக்கும் குயிலுக்கும்    ஒரு பாட்டு பாடிச்சென்றாய் இந்த உலகில்... வெண்தலை முண்டாசும்,    கருநிற உடற்கோப்பும், கால்களிலே கட்டை செருப்பும்,    மார்தனிலே வீரமுழக்கமும், சிந்தையிலே விடுதலை வேட்கையுடன்,    வந்தாய் நீ... வீன்நேரம் வீட்டில்    கூட கழிக்காமல் விடுதலை வித்துக்கள்    விதைத்தாய் இவ்வுலகில்... வீறுகொண்டேழுந்தாய் விடுதலைக்காக    சீர் செய்திருந்தாய் உந்தன் சிந்தையை பேர் கொண்டாய் " மகா கவி சுப்ரமணிய பாரதி" என்றா இல்லை, இல்லை "மெகா கவி சூப்பர் மனிதன் பாரதி" என்று... நீ பிறந்ததும் விடுதலை    வேட்க்கை வந்ததா- இல்லை விடுதலை வேட்க்கைக்காக    நீ பிறந்து வந்...