Skip to main content

காதல(லாய் ஓர்)ர் தினம்....


முன் நின்று, முதல் பார்த்து
     முறுவலித்து - பின் சென்று
வழிப்பார்த்து, விழியால்
    நகைத் தெல்லாம் ஓர் காலம்....

ஆம்!!!! அன்றெல்லாம்

" யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்க்காகால்
  தானோக்கி மெல்ல தகும்"

    என்றோம் வள்ளுவன் வழியாய்...

விரல் வலிக்க எழுதியும்,
    கால் வலிக்க காத்திருந்தும்,
கனத்த இதயமும்
   கையில் கடிதமுமாய்
காதல் செய்தோம்....

வலியிருந்தது அனால் வழியில்லை
    இணை சேர..- எத்தனை
எத்தனை தடைகள்
    " சாதி என்றான், பேதமென்றான்
மதம் என்றான், குலமென்றான்
    பணமென்றான்"- பகட்டாய்...

இன்றும் இவை இருக்கிறது
    யார் இல்லை என்றார்....

காதலை கனினியிலும், கைபேசியிலும்
   கதைத்தோ, குறுந்தகவல்
கொடுத்தோ, பெற்றோ மகிழ்கிறோம்...
   இதுவா காதல்..?

" கண்களவு கொள்ளும் சிறுநோக்கும் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது"...- இதுவல்லவே...!!!

பிழை கூறவில்லை நான்!
    மண்ணில் சிலர் உளர்...
யாம் வேண்டுவதெல்லாம் ,
    " பெற்றோர் நிராகரித்தலும்,
      பிள்ளைகள் விரட்டுதலும்" வேண்டாமே?...
     அன்பும், அரவணைப்பும்
பொறுமையும், விட்டுகொடுத்தலுமே காதல்...

காதல் தினமும் தேவை, பின்
     எதற்கோர் தனி காதலர் தினம்,
வாழ்வோம் " காதலாய் ஒவ்வோர் தினமும், கணமும்"...

.

Comments

Popular posts from this blog

பெண் என்பவள்!!!

வெட்கி குனிதல் நாணம்! ஈர்பல் நகைத்தல் வெட்கம்! விசும்பிய குரலும், சுருங்கிய விழியும் நேசம்! கோதிய விரலும் கோதுதல் பதமும் பாசம்! மக்கட்- அதட்டிய பின்பு, தானே அழுதிடும் கண்கள் சோகம்! பஞ்சனை மஞ்சத்தில் மேனி பசுந்தீ பரவலாய் மோகம்! தன்னுயிர் நீந்தீனும் மக்கட், பதி நினை மறவா- ஒரு தீரா தாபம்! தன் உடல் எரித்தும் ஒளி கொடுக்கும்- அவள் என்றும் அணையா உயிர் தீபம்!...

நிராகரிப்பு!!!!

அவனும் வேண்டாம் அவனென்றால் எதுவும் வேண்டாமாம்! தன்னிலை தாழாமலும் பெண்ணிலை குறையாமலும் கூறினாள்... என்ன உக்கிரம்!!!... வழிபார்த்து விழியாக வாசல் வந்தேன்- கூறிய செவிரெண்டும் விழுங்கியவை யாவும் தாக்கின மின்னலாய், வழியுமுன் உள்ளடக்கிய விழியாய், விழி நிமிர்த்தி நான் கண்டேன் என்னவள்- சென்னிலவாய் கோபத்தில்...! நகைத்த இதழும் கனத்த இதயமுமாய் கண் நீர் சிரிக்க விடைப்பெற்றாள் விரைவாக.. தடுமாறிய இதயமும் தடம்மாறிடா உறவுமாய் நிமிர்ந்த சிரமும் தாழ்ந்த விழியுமாய் நான்... குறிப்பறிந்து குறைகூறா மனதுடன், என் வலியை வழியனுப்பி, என்னவள் வலி உணர்துனர்ந்தேன்... கட்டுபாடற்ற கலங்கிய விழி அணையுடைத்து- அரங்கேற்றியது கண்ணீர் மழையை என்னவளுக்காய்... வெட்க்குகிறேன் நான், நடந்து முடியா வார்த்தைகளுக்கும் அரங்கேறிய நாடகத்துக்கும்... நிச்சயமாய்!!! அவள்- என்னவள்தான் என் நெஞ்சின் அறையில் நான்! - அவளுக்கில்லை ஆம்ம்...! அவளுக்கானவன் நானில்லை- இருந்தும் அவளை நிராகரிக்க முடியவில்லை, அவள்!- என்னின் அலைகழிக்க முடியா " இதய துடிப்பு " .... .

கை(ம்)பெண்!!!

கணவனை இழந்தவள் விதவையாம்??? அவளுக்கு உலகம் இட்ட பெயர் இதுவாம்... நெற்றி பொட்டு வைக்க தடையுண்டு, மறுமணம் செய்ய வழியுண்டு - ஆனால் பூவில்லா பூவையராய் மற்றிட்டோம், மதியற்று போய்விட்டோம் மனதளவில்... விதவை என்று சொல்லி ஏய்க்காதே,.. இந்த பெண்ணுக்கும் கைம்பெண் என்ற பொருளுண்டு அப்பெயரின் இரு மெய்ப்போல இவளுக்கும் இரு வாழ்வுண்டு.... கைப்பொம்மையாய் இப்பெண்களை ஆட்டிட்டோம் இனி புதுவாழ்வை தொட்டிட்ட வாழ்த்திடுவோம்...... .