Skip to main content

மெகா கவியே!!!..

பெண்ணை இழித்தோரை
   இடித்துவிட்டாய் உந்தன்
இன்னிசை பாக்களால்,
   நம்மை எதிர்த்தோரை
துரத்திவிட்டாய்
   உந்தன் வேட்க்கையால்...

காக்கை, குருவி
   எங்கள் ஜாதி என்றாய்
உயிர் வாழும் ஒற்றுமையினாலா?
   ஓடியாடும் பாப்பாக்கும்,
பாடி பறக்கும் குயிலுக்கும்
   ஒரு பாட்டு பாடிச்சென்றாய்
இந்த உலகில்...

வெண்தலை முண்டாசும்,
   கருநிற உடற்கோப்பும்,
கால்களிலே கட்டை செருப்பும்,
   மார்தனிலே வீரமுழக்கமும்,
சிந்தையிலே விடுதலை வேட்கையுடன்,
   வந்தாய் நீ...

வீன்நேரம் வீட்டில்
   கூட கழிக்காமல்
விடுதலை வித்துக்கள்
   விதைத்தாய் இவ்வுலகில்...
வீறுகொண்டேழுந்தாய் விடுதலைக்காக
   சீர் செய்திருந்தாய்
உந்தன் சிந்தையை

பேர் கொண்டாய்

" மகா கவி சுப்ரமணிய பாரதி" என்றா

இல்லை, இல்லை

"மெகா கவி சூப்பர் மனிதன் பாரதி" என்று...

நீ பிறந்ததும் விடுதலை
   வேட்க்கை வந்ததா- இல்லை
விடுதலை வேட்க்கைக்காக
   நீ பிறந்து வந்தாயா?...
சொல் கவியே
   உனை நான் நேரில்
பர்த்தில்லை என்றாலும்
   என் குரு நீயே
உன்வடிக்கு நானிடும்
   கவிப்பூ இதுவே...

.

Comments

  1. முண்டாசு கவிக்கு நல்ல கவி. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நல்ல கவிதை..

    ReplyDelete
  3. நல்லா இருக்கு கவிதை.. :)

    ReplyDelete
  4. @ LK: நன்றி நண்பா.. நம்மால் முடிந்த மரியாதையை நம் கொடுத்தே ஆகவேண்டும்...
    @ பதிவுலகில் பாபு: நன்றி நண்பரே!..எனது பதிவுகளை தவறாமல் படித்து வருவதற்கு நன்றி!
    @Paul: நன்றி நண்பா..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பேருந்து!!!

பிறர் தடவினாலும்-உரசினாலும், இடம்விடாமல் இடை தடவினாலும் உயிருள்ள ஜடமாய் - நெரிசலாய் நெருக்கமாய் பயணிக்கும் - தமக்கையும் மார்கழி மாதமயினும் வெப்பமும், தொப்பமுமாய் நனைய - தமையனும்.... முதியோர் இருக்கையில் இளைஞன் அமர்ந்தும் கேட்க முடியா- பெற்றோரும்... மன ஊனத்தால் - உடல் ஊனத்தை ஏளனமாய் ஏய்க்கும் - பதறுகளும்... பணமே பலனென்று பொருள் திருடும் - திருடனும் திருப்தியாய்தான் வாழ்கின்றனர்... எத்தனை நிறம், எத்தனை மனிதம்,எதனை மிருகம்- நம்மில்.. கற்கிறேன் வாழ்க்கையை காலை மாலை பயணத்தில்...

பெண் என்பவள்!!!

வெட்கி குனிதல் நாணம்! ஈர்பல் நகைத்தல் வெட்கம்! விசும்பிய குரலும், சுருங்கிய விழியும் நேசம்! கோதிய விரலும் கோதுதல் பதமும் பாசம்! மக்கட்- அதட்டிய பின்பு, தானே அழுதிடும் கண்கள் சோகம்! பஞ்சனை மஞ்சத்தில் மேனி பசுந்தீ பரவலாய் மோகம்! தன்னுயிர் நீந்தீனும் மக்கட், பதி நினை மறவா- ஒரு தீரா தாபம்! தன் உடல் எரித்தும் ஒளி கொடுக்கும்- அவள் என்றும் அணையா உயிர் தீபம்!...

நிராகரிப்பு!!!!

அவனும் வேண்டாம் அவனென்றால் எதுவும் வேண்டாமாம்! தன்னிலை தாழாமலும் பெண்ணிலை குறையாமலும் கூறினாள்... என்ன உக்கிரம்!!!... வழிபார்த்து விழியாக வாசல் வந்தேன்- கூறிய செவிரெண்டும் விழுங்கியவை யாவும் தாக்கின மின்னலாய், வழியுமுன் உள்ளடக்கிய விழியாய், விழி நிமிர்த்தி நான் கண்டேன் என்னவள்- சென்னிலவாய் கோபத்தில்...! நகைத்த இதழும் கனத்த இதயமுமாய் கண் நீர் சிரிக்க விடைப்பெற்றாள் விரைவாக.. தடுமாறிய இதயமும் தடம்மாறிடா உறவுமாய் நிமிர்ந்த சிரமும் தாழ்ந்த விழியுமாய் நான்... குறிப்பறிந்து குறைகூறா மனதுடன், என் வலியை வழியனுப்பி, என்னவள் வலி உணர்துனர்ந்தேன்... கட்டுபாடற்ற கலங்கிய விழி அணையுடைத்து- அரங்கேற்றியது கண்ணீர் மழையை என்னவளுக்காய்... வெட்க்குகிறேன் நான், நடந்து முடியா வார்த்தைகளுக்கும் அரங்கேறிய நாடகத்துக்கும்... நிச்சயமாய்!!! அவள்- என்னவள்தான் என் நெஞ்சின் அறையில் நான்! - அவளுக்கில்லை ஆம்ம்...! அவளுக்கானவன் நானில்லை- இருந்தும் அவளை நிராகரிக்க முடியவில்லை, அவள்!- என்னின் அலைகழிக்க முடியா " இதய துடிப்பு " .... .