Skip to main content

காதல் தோழியே!!!

பெண்ணே- என்னரும் தோழியே
      தோளுக்கு தோளாய்
இன்பத்தில் தேனாய்
     துன்பத்தில் தூணாய்
எனக்கு உதவியவளே...

நட்பெனும் கப்பலில்
     நானும் நீயும் - காதலில்லா
கைதுடுப்பை அசைக்கிறோம்...
    வாழ்க்கை கடலை கடக்கையில்
காதலெனும் புயல் வீச
    அன்பென்னும் மின்னல் வெட்ட
இணைவெனும் இடி
     முழங்கியது நம் மனதில்...

காதலைவிட, காலத்தைவிட
    நட்பென்பது சிறந்ததல்லவா
என் காதல் தோழியே!..
    என் ஆசையை நன் மறைக்க
உன் ஆசையை நீ மறைக்க
    வாழ்க்கை கடலில்
ஒரே கப்பலில்- நீயும் நானும்...

.

Comments

  1. நன்று..!! குறிப்பாக கடைசி பத்தி..!! வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. காதலை மறப்பதை மறைப்பதை மறப்போம்
    அதாவது வெளிப்படுத்துவோம்

    ReplyDelete
  3. @KOSULYA: Thank you very much...

    @Amina: Thank you very much...

    @பால்: நன்றி நண்பரே..தொடர்ந்து எனது பதிவை படித்து வருவதுற்கு மற்றொமொரு நன்றி..

    @ meena: நிச்சயமாக நம் காதலை மறக்கவும் கூடாது, மறைக்கவும் கூடாது..என்னில் ஏற்பட்ட ஓர் நிகழ்வுதான் இது..
    உணர்த்த பின்பு நகைக்கிறேன் மனதளவில்..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெண் என்பவள்!!!

வெட்கி குனிதல் நாணம்! ஈர்பல் நகைத்தல் வெட்கம்! விசும்பிய குரலும், சுருங்கிய விழியும் நேசம்! கோதிய விரலும் கோதுதல் பதமும் பாசம்! மக்கட்- அதட்டிய பின்பு, தானே அழுதிடும் கண்கள் சோகம்! பஞ்சனை மஞ்சத்தில் மேனி பசுந்தீ பரவலாய் மோகம்! தன்னுயிர் நீந்தீனும் மக்கட், பதி நினை மறவா- ஒரு தீரா தாபம்! தன் உடல் எரித்தும் ஒளி கொடுக்கும்- அவள் என்றும் அணையா உயிர் தீபம்!...

நிராகரிப்பு!!!!

அவனும் வேண்டாம் அவனென்றால் எதுவும் வேண்டாமாம்! தன்னிலை தாழாமலும் பெண்ணிலை குறையாமலும் கூறினாள்... என்ன உக்கிரம்!!!... வழிபார்த்து விழியாக வாசல் வந்தேன்- கூறிய செவிரெண்டும் விழுங்கியவை யாவும் தாக்கின மின்னலாய், வழியுமுன் உள்ளடக்கிய விழியாய், விழி நிமிர்த்தி நான் கண்டேன் என்னவள்- சென்னிலவாய் கோபத்தில்...! நகைத்த இதழும் கனத்த இதயமுமாய் கண் நீர் சிரிக்க விடைப்பெற்றாள் விரைவாக.. தடுமாறிய இதயமும் தடம்மாறிடா உறவுமாய் நிமிர்ந்த சிரமும் தாழ்ந்த விழியுமாய் நான்... குறிப்பறிந்து குறைகூறா மனதுடன், என் வலியை வழியனுப்பி, என்னவள் வலி உணர்துனர்ந்தேன்... கட்டுபாடற்ற கலங்கிய விழி அணையுடைத்து- அரங்கேற்றியது கண்ணீர் மழையை என்னவளுக்காய்... வெட்க்குகிறேன் நான், நடந்து முடியா வார்த்தைகளுக்கும் அரங்கேறிய நாடகத்துக்கும்... நிச்சயமாய்!!! அவள்- என்னவள்தான் என் நெஞ்சின் அறையில் நான்! - அவளுக்கில்லை ஆம்ம்...! அவளுக்கானவன் நானில்லை- இருந்தும் அவளை நிராகரிக்க முடியவில்லை, அவள்!- என்னின் அலைகழிக்க முடியா " இதய துடிப்பு " .... .

நீயா சொல்லும் வரை...

நினைக்கும் போது கூட     கண்ணில் நீர் வந்தது நீ என்னை கேட்க்கும் வரை,     கேட்ட கணத்தில் நின்றோதொரு நொடி     என் இயக்கமெல்லாம்.. கண்ணே என்றா     நன் அழைப்பேன், இல்லை, இல்லை     கன்னி எனை வென்ற கள்ளியா நீ     இல்லை, இல்லை துன்பங்கள் குறைத்தாய்    இன்பத்தில் இருக்கும்போது ஆம்! நீ என்னின் நிகழ்காலம்!...     சுற்றி வர நினைத்தேன் சுழற் காற்றாய்,     தடைபோட நினைத்தேன் அணைக்கட்டாய்,     சுழன்று கொண்டு அணைப்போட்டாய்     உன் நெஞ்சில்- எனக்கு... நீயா வந்து சொல்லும் வரை    நானா உரைப்பேன் உனைப்பற்றி என்    நெஞ்சில் உள்ளதை... .