அவனும் வேண்டாம்
அவனென்றால் எதுவும் வேண்டாமாம்!
தன்னிலை தாழாமலும்
பெண்ணிலை குறையாமலும் கூறினாள்...
என்ன உக்கிரம்!!!...
வழிபார்த்து விழியாக
வாசல் வந்தேன்- கூறிய
செவிரெண்டும் விழுங்கியவை யாவும்
தாக்கின மின்னலாய்,
வழியுமுன் உள்ளடக்கிய விழியாய்,
விழி நிமிர்த்தி நான் கண்டேன்
என்னவள்- சென்னிலவாய்
கோபத்தில்...!
நகைத்த இதழும்
கனத்த இதயமுமாய்
கண் நீர் சிரிக்க
விடைப்பெற்றாள் விரைவாக..
தடுமாறிய இதயமும்
தடம்மாறிடா உறவுமாய்
நிமிர்ந்த சிரமும்
தாழ்ந்த விழியுமாய் நான்...
குறிப்பறிந்து குறைகூறா
மனதுடன், என் வலியை
வழியனுப்பி, என்னவள்
வலி உணர்துனர்ந்தேன்...
கட்டுபாடற்ற கலங்கிய விழி
அணையுடைத்து- அரங்கேற்றியது
கண்ணீர் மழையை என்னவளுக்காய்...
வெட்க்குகிறேன் நான்,
நடந்து முடியா வார்த்தைகளுக்கும்
அரங்கேறிய நாடகத்துக்கும்...
நிச்சயமாய்!!!
அவள்- என்னவள்தான்
என் நெஞ்சின் அறையில்
நான்! - அவளுக்கில்லை
ஆம்ம்...! அவளுக்கானவன்
நானில்லை- இருந்தும் அவளை
நிராகரிக்க முடியவில்லை,
அவள்!- என்னின்
அலைகழிக்க முடியா
" இதய துடிப்பு " ....
.
அன்பு சுகமானது தான், ஆனால்.. அது தரும் சோகம் அளவிலாதது
ReplyDeleteஎன்றாலும் இதயங்கள் வேண்டுவது உண்மையான அன்பை மட்டும் தான் :)
//அவள்- என்னவள்தான்//
ReplyDeleteok ..right
//என் நெஞ்சின் அறையில்
நான்! - அவளுக்கில்லை
ஆம்ம்...! அவளுக்கானவன்
நானில்லை- இருந்தும் அவளை
நிராகரிக்க முடியவில்லை,//
no problem, i will inform to your father and mother, let we fix the date
try to add your post in below link
ReplyDeletehttp://www.tamilmanam.net